Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

அமைச்சர் மைத்திரிபால சொன்னது ஒன்று… ஊடகச் செய்தி மற்றொன்று…! ஆதங்கப்படுகிறார் அமைச்சர்

$
0
0
இன்று (25) ஊடக அமைச்சின் கொழும்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு டெங்கு பற்றிய கருந்தரங்கொன்று சுகாதார அமைச்சினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

அங்கு உரையாற்றிய அமைச்சர் மைத்திரிபால தெரிவித்தாவது -

எனது 25 வருட பாராளுமன்ற வாழ்வுபற்றி ஒரு நேர்காணலைக் காண்பதற்கு பிரபல சிங்களப் பத்திரிகையின் ஞாயிறு இதழில் பிரசுரிக்கஒர் ஊடகவியலாளர் என்னை கடந்த புதன்கிழமை நேர்கண்டார்.

அவர் என்னை நேர்கண்டபோது, மறக்க முடியாத சம்பவங்கள் ஏதும் உண்டா? எனக் கேட்டார். அதற்கு நான் பாரளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மட்டும் எனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் எனத் தெரிவிக்கின்றேன்.

“நான் முதன் முதலில் 92ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும்போது முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானமொன்று ஆளும் கட்சிஎ திர்க்கட்சியினர் அன்று கொண்டு வந்தார்கள். அப்போது> சபாநாயகராக எம்.எச்.முஹம்மத் பதவிவகித்தார். அவர் அந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை ஏற்காது இருந்தார். அதற்காகவே நான் திடிரென பாராளுமன்றத்தில் எழுந்து கௌரவ “பக்காநாயக்க அவர்களே” என்று சபையில் சொன்னேன்.

உடனே சபாநாயகர் கோபமுற்று அவ்வாசனத்தை உடனடியாக வாபஸ் பெறவும் எனத் தெரிவித்தார். நான் மீண்டும் பகாநாயக்க அவர்களே என்று கூறினேன். உடன் அவர் வெளியில் நின்ற பொலிசாரை அழைத்து என்னை வெளியில் தூக்கிக் கொண்டு போகும்படி உத்தரவிட்டார். உடன் உள்ளே 6 பொலிசார் வந்து என்னைத் தூக்கிக் கொண்டு வெளியே போட்டார்கள். அதுதான் எனது பாராளுமன்ற வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். (சிங்களத்தில் பகாநாயக்க என்ற அர்த்தம் (களவாக பணம் பெற்ற)பெற்ற சபாநயகரே என்ற அர்த்தமாகும்.)

இதனை சரியாக எழுதி கொடுத்திருந்தார் என்னை நேர்கண்ட ஊடகவியலாளர். அதனை அந்த பிரபல பத்திரிகையில் பிரசுரிக்க முன் எழுத்துப் பிழைபார்த்தவர் “பக்கா”நாயக்க அவர்களே என்ற வசனத்தை சபாநாயகரே என்று திருத்தியிருந்தார். பத்திரிகையில் வெளிவந்தபின் என்னிடம் பலர் கேள்வி கேட்கின்றனர். சபாநாயகர் என்றுசொன்னதுக்கு உங்களை ஏன் பொலிசார் வெளியில் கொண்டு போட்டார்கள்.

இதுதான் ஒரு வசனத்தை பிழை திருத்தி மாற்றியதால் அந்த நேர்காணில் அர்த்தமே இல்லாமல் போகிவிட்டது எனஅமைச்சர் மைத்திரிபால சிறிசேன அங்கு வருகை தந்திருந்த ஊடகவியளாலருக்கு இதனை நீங்கள் பாடமாகக் கொள்ளவும் எனவும் தெரிவித்தார்.

(அஷ்ரப் ஏ சமத்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>