Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

இன்று மெல்போர்ணில் இடம்பெற்ற அகதிகளுக்கான கவனயீர்ப்புப் பேரணி! (படங்கள் இணைப்பு)

$
0
0
இன்று (13) ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ண் நகர்ப்பகுதியில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கவனயீர்ப்புப் பேரணியிலும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளரை நடாத்தும் முறையை எதிர்த்தும், அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையையும் அணுகுமுறையையும் விமர்சித்தும் அகதிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட இப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் புகழ்பெற்ற மெல்பேர்ண் நூல்நிலையம் முன்பாகப் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.

குருத்தோலை ஞாயிறான இன்று விக்ரோறிய மாநிலத்தின் கிறிஸ்தவ மத அமைப்புக்கள் பலவும் முழுமூச்சாக இப்பேரணிக்குத் தமது ஆதரவை நல்கி பெருமளவு திரண்டிருந்தன. சரியாக 1.45 மணிக்கு பெருமளவான தேவாலயங்களில் அகதிகளுக்கு ஆதரவாக மணியொலிகள் எழுப்பப்பட்டன.

கிறிஸ்தவ அமைப்புக்கள் அகதிகள் தொடர்பில் தமது கரிசனையையும் அவுஸ்திரேலிய அரசின் அகதிகள் மீதான அணுகுமுறை தொடர்பாக தமது விமர்சனத்தையும் வெளிப்படையாக அறிவித்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டன. வழமைபோல் அகதிகள் விடயத்தில் தீவிரமாகப் போராடிவரும் இடதுசாரி அமைப்புக்கள், பொதுநல அமைப்புக்கள், மனிதவுரிமை அமைப்புக்கள் என்பனவும் இப்பேரணியிற் கலந்துகொண்டன.

அவுஸ்திரேலியாவின் மூன்றாவது பெருங்கட்சியான கிறீன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு தமது உரையை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மெல்பேர்ண் நகரிலிருந்து முதன்மை வீதி வழியாகச் சென்ற இப்பேரணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதாகைகளை ஏந்திவந்ததோடு அகதிகளுக்கு ஆதரவாகவும் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டு வந்தனர்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>