தான் இறக்கும் வரையில் ஜனாதிபதியாக இருக்குமாறு தான் யாப்பை மாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க குறிப்பிட்டுள்ளதானது மிகப் பெரிய பொய்யே என முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவிருந்த அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க குறிப்பிடுகிறார்.
உடுநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி, இரண்டு முறைகளுக்கு மேலாக நான் ஒருபோதும் ஜனாதிபதியாக இருக்க மாட்டேன் எனச் சொல்லியிருந்தார். அது மிகப் பெரிய பொய்யாகும். நான் அவரை இலங்கைக்கு அழைத்துவந்த, அவரது கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர். அவர் இறக்கும்வரை ஜனாதிபதியாக இருப்பதற்கான யாப்பை அமைப்பதற்கு எவ்வளவோ முயன்றார். இறைவன் துணையால் அவருக்கு அது முடியவில்லை. காரணம் அவருக்கு அவ்வளவாக வாக்குகள் கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சியினராகிய எங்களைச் சேர்த்துக் கொள்வது எப்படிப் போனாலும், இருக்கின்றவர்களைச் சரியாக வைத்துக் கொள்ளவும் தெரியவில்லை. 11 ஆண்டு ஆட்சி செய்தார்.. செய்தது ஒன்றுமில்லை. சிறியதொரு இடமேனும் கிடைத்திருந்தால் அவர் யாப்பை மாற்றி இறக்கும் வரை அரசியலில் இருந்திருப்பார். அவருக்கு அதற்கு அக்கால ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ இடம்கொடுக்கவில்லை.”
(கேஎப்)
உடுநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி, இரண்டு முறைகளுக்கு மேலாக நான் ஒருபோதும் ஜனாதிபதியாக இருக்க மாட்டேன் எனச் சொல்லியிருந்தார். அது மிகப் பெரிய பொய்யாகும். நான் அவரை இலங்கைக்கு அழைத்துவந்த, அவரது கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர். அவர் இறக்கும்வரை ஜனாதிபதியாக இருப்பதற்கான யாப்பை அமைப்பதற்கு எவ்வளவோ முயன்றார். இறைவன் துணையால் அவருக்கு அது முடியவில்லை. காரணம் அவருக்கு அவ்வளவாக வாக்குகள் கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சியினராகிய எங்களைச் சேர்த்துக் கொள்வது எப்படிப் போனாலும், இருக்கின்றவர்களைச் சரியாக வைத்துக் கொள்ளவும் தெரியவில்லை. 11 ஆண்டு ஆட்சி செய்தார்.. செய்தது ஒன்றுமில்லை. சிறியதொரு இடமேனும் கிடைத்திருந்தால் அவர் யாப்பை மாற்றி இறக்கும் வரை அரசியலில் இருந்திருப்பார். அவருக்கு அதற்கு அக்கால ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ இடம்கொடுக்கவில்லை.”
(கேஎப்)