Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் காணொளி தொடர்பில் கவலை தெரிவிக்கிறது முஸ்லிம் கவுன்ஸில்!

$
0
0
புத்த பெருமானுக்கும் பௌத்த சமயத்திற்கும் இழிவு உண்டாக்கும் காணொளி ஒன்றை இஸ்லாமிய அமைப்பொன்றினால் இணையத்தில் “யூரியுப்பில்“ வெளியிடப்பட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

“ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்” எனும் இஸ்லாமிய அமைப்பினால் 2013 ஆம் ஆண்டு இணையத்தில் ஒன்றுசேர்த்திருந்த காணொளியே தற்போதைய பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

முஸ்லிம் அமைப்பாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட முஸ்லிம்களாயினும் சரி புத்த பெருமானுக்கோ பௌத்த மதத்திற்கோ இழிவு உண்டாக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்கவியலாது என அக்கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் பீ.பீ.ஸி செய்திச் சேவையிடம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது -

இஸ்லாமிய சமயம் எந்தவொரு மதத்தையும் நிந்திப்பதில்லை. இலங்கை வாழ் முஸ்லிம்களில் 99% இற்கு மேற்பட்டோர் இந்தக் காணொளிக்கு எதிர்ப்புத் தெரிவித்த வண்ணமுள்ளனர்.

சிவில் அமைப்பின் ஒன்றுகூடலாக உள்ள முஸ்லிம் கவுன்ஸிலின் நோக்கம் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் எனும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவதே எனக் குறிப்பிட்டுள்ள என்.எம். அமீன், எந்தவொரு மதமும் இன்னொரு மதத்தை இழிந்துரைப்பதை தங்களது அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சகல இனங்களும் தற்போது ஒருமைப்பாட்டுடனும், சமாதானமாகவும் வாழ்கின்றது என்பதற்கு இம்முறை நடந்தேறிய வெசாக் பௌர்மணி நிகழ்ச்சி எடுத்துக்காட்டாகும். இந்நிகழ்ச்சியில் மக்கள் மத வேறுபாடு களைந்து தங்களது ஒத்துழைப்பை நல்கியிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>