Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

இந்தியாவுக்கே எச்சரிக்கை விடும் த.தே.கூ!! இலங்கைத் தழிழர்களை சிக்கலில் மாட்டுவNது முழு நோக்கம்!

$
0
0
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியுமான சுரேஷ் பிரே மச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் இனப் பிரச்சினைக்கு இந்தியா சரியான கொள்கை திட்டமிடல் களை மேற்கொள்ளாவிட்டால் தமிழ் மக்கள் தமது பாது காப்பையும் தமது இருப்பையும் தமது தனித்துவத்தையும் தக்கவைத்து கொள்ளவும் தமக்கு உரித்தான உரிமைகளை நிலைநாட்டி கொள்ளவும்தமக்கு ஆதரவு அளிக்கும் சக்திகளுடன் இணைந்து செயற்படும் நிலைக்கு செல்வது தடுக்க முடியாததாகிவிடும் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தியாவுக்கு விடுக்கும் இந்த எச்சரிக்கை தொனியினை கண்டு இலங்கை வாழ் தமிழ் மக்கள் அதிர்ந்து போயுள்ளார்கள் என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரும் இந்திய அரசு தமிழ் மக்களின் வாழ்வில் ஆதாரமாக செயற்படும் பொழுது ஒரு வீடு கூட கட்டிக் கொடுக்க முடியாத சுரேஷ் எம்.பியின் இந்திய அரசுக்கு விடுக்கும் கடும் தொனியிலான காலக்கெடு எச்சரிக்கை இலங்கை வாழ் தமிழ் மக்களை அசௌகரியப்படுத்துவதாகவே அமையும்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டாக இருந்தாலும் கூட மக்கள் எதிர்பார்த்ததை போல அது ஒரு கட்டுக்கோப்பான ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அமைப்பாக இன்னமும் மாற்றம் பெறவில்லை என்ற அவரது பகிரங்கமான கருத்து மூலமாக அக்கட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சிலரது நம்பிக்கையை அவநம்பிக்கையாக மாற்ற முயல்கின்றரா அல்லது வட மாகாண சபையில் தனது சகோதரருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடாக தமிழ்க் கூட்டமைப்பை பழிவாங்க முயல்கிறாரா என்பதும் தெரியவில்லை எனவும் பாபு சர்மா தெரிவித்துள்ளார்


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>