வவுனியாவில் இதுவரை அண்ணளவாக 120 விளையாட்டுக் கழகங்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனால் அத்தனை கழகங்களும் சரியான முறையில் இயங்குவது இல்லை எனற குற்றச்சாட்டை யாரும் மறுக்க முடியாது. இதே வேளை விளையாட்டுக் கழகங்கள் தமது கழக அபிவிருத்தி என்ற பெயரில் நிதிகளை பல வழிகளில் திரட்டி அவற்றை தவறான வழிகளுக்கு பயன்படுத்துகின்றனர். இத்தகைய சம்பவம் ஒன்று வவுனியா நகர் பகுதியில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள உதயதாரகைவிளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த உதயதாரகை என்ற விளையாட்டுக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன் வவுனியா பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. அதே நேரம் மூன்று வருடங்களுக்கு முன் இந்த விளையாட்டுக் கழக வீரர் ஒருவர் அதே விளையாட்டுக் கழக சிறுவர்கள் சிலரால் அடித்து கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாக இருக்கின்றது. இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள இந்த விளையாட்டுக் கழகத்தில் மீண்டும் ஒரு குற்றச் செயல் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
அதாவது கடந்த சில வாரங்களாக இந்த விளையாட்டுக் கழகம் தமது கழக அபிவிருத்திக்காக என்று மென்பந்து கிரிகட் சுற்று போட்டி ஒன்றை நடாத்தி வருகின்றது. இதற்கு எழுபது அணிகளுக்கு மேல் பங்குபற்றியுள்ளதாக அந்த கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நடாத்தப்படும் இந்த போட்டியில் இதுவரை ரூபாய் 85000.00 வரை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதை விட அனுசரணையாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகைப் பணம் பெறப்பட்டுள்ளதாகவும் ஊர் மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்த பணம் எதற்கு பயன்படுகின்றது என்று கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அத்தோடு இந்த கழகம் வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியால மைதானத்திலேயே நடைபெறுகின்றது. இங்கு போட்டிகளில் கலந்துகொள்ள வரும் வீரர்களும், உதயதாரகை அணி வீரர்களும் பாடசாலை வளாகத்தை புகைத்தல் மற்றும் சமூக சீர்கேட்டு வேலைகளுக்கும் பயன்படுத்துவது அறியப்பட்டுள்ளது. இதற்கு பாடசாலை சமூகம் கூறபோகும் பதில் என்ன?
வலயக்கல்வி அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு எம் நிருபர் குழு சென்ற வேளை வரும் புதன்கிழமை
மகாறம்பைக்குளத்தில் இருந்து
கண்ணன்
இந்த உதயதாரகை என்ற விளையாட்டுக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன் வவுனியா பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. அதே நேரம் மூன்று வருடங்களுக்கு முன் இந்த விளையாட்டுக் கழக வீரர் ஒருவர் அதே விளையாட்டுக் கழக சிறுவர்கள் சிலரால் அடித்து கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாக இருக்கின்றது. இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள இந்த விளையாட்டுக் கழகத்தில் மீண்டும் ஒரு குற்றச் செயல் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
அதாவது கடந்த சில வாரங்களாக இந்த விளையாட்டுக் கழகம் தமது கழக அபிவிருத்திக்காக என்று மென்பந்து கிரிகட் சுற்று போட்டி ஒன்றை நடாத்தி வருகின்றது. இதற்கு எழுபது அணிகளுக்கு மேல் பங்குபற்றியுள்ளதாக அந்த கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நடாத்தப்படும் இந்த போட்டியில் இதுவரை ரூபாய் 85000.00 வரை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதை விட அனுசரணையாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகைப் பணம் பெறப்பட்டுள்ளதாகவும் ஊர் மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்த பணம் எதற்கு பயன்படுகின்றது என்று கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அத்தோடு இந்த கழகம் வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியால மைதானத்திலேயே நடைபெறுகின்றது. இங்கு போட்டிகளில் கலந்துகொள்ள வரும் வீரர்களும், உதயதாரகை அணி வீரர்களும் பாடசாலை வளாகத்தை புகைத்தல் மற்றும் சமூக சீர்கேட்டு வேலைகளுக்கும் பயன்படுத்துவது அறியப்பட்டுள்ளது. இதற்கு பாடசாலை சமூகம் கூறபோகும் பதில் என்ன?
வலயக்கல்வி அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு எம் நிருபர் குழு சென்ற வேளை வரும் புதன்கிழமை
மகாறம்பைக்குளத்தில் இருந்து
கண்ணன்