Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : Hard Talk

$
0
0
ஹிரு-TV உடனான Hard-Talk நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் :

கேள்வி : உங்களுடைய பாட்டனாரோ அக்காலத்தில் 50 க்கு 50 ஐ கேட்டார். நீங்கள் முழுதையும் அல்லவா கேட்கின்றீர்கள்?

பதில் : எங்களுடைய கட்சி தெளிவாக சொல்வதென்னவென்றால் சிறுபாண்மையினருக்கு ஏனைய இனத்தவரைப்போல் அங்கீகாரம்
வேண்டுமென்பதாகும்.

கேள்வி : நீங்கள் முதலாவதாக பாராளுமன்றுக்கு தெரிவானது எந்த ஆண்டில்?

பதில் : 2001 ல்

கேள்வி : 2010 ற்கு பின்னர் உங்களுக்கு பாராளுமன்றுக்கு செல்ல முடியாதுபோனதுதானே?

பதில் : ஆம் போக முடியாது போனது.

கேள்வி : புலிகளியக்கமிருக்கும்போது பாராளுமன்றுக்கு செல்லக்கூடியதாகவிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு புலிகளியக்கம் அழிந்த பின்னர் பாராளுமன்று செல்ல முடியாதுபோனது ஏன்?

பதில் : இது புலிகளிக்த்துடன் சம்பந்தமானதோர் பிரச்சினை அல்லவே. நாம் புலிகளியக்கம் சமர்ப்பித்த வேண்டுதல்களை சமர்ப்பிக்கவில்லையே. நாங்கள் சமஸ்டி முறைக்காகவே முன்நிற்கின்றோம்.

கேள்வி : தமிழ் மக்கள் சமஸ்டி முறையை ஏற்றுக்கொள்கின்றார்களானால் ஏன் தமிழ் மக்கள் உங்களையும் உங்கள் கட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை?

பதில் : த.தே.கூட்டமைப்பும் சமஸ்டி என்றுதான் கூறுகின்றது. வாக்குகளைப் பெறத்தான் அவ்வாறு கூறுகின்றனர். ஆனால் நாங்கள் கூறுவது யாதெனில் தமிழ் மக்கள் த.தேகூ வினரால் மக்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றப்படப்போகின்றார்கள் என்பதே!

கேள்வி : 1977 ல் தான் தமிழர் ஒருவர் இந்நாட்டில் எதிர்கட்சித் தலைவரானார். அமிர்தலிங்கம் அவர்கள் சிறந்தவரா அன்றில் சம்பந்தரா?

பதில் : அமிர்தலிங்கம் அவர்கள் அன்று ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களின் அரசிற்கு எதிர்ப்பைக் காட்டினார். ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. இவர்கள் வாக்குறுதிகளை வழங்கியே பாராளுமன்றுக்கு வந்துள்ளார்கள்.

கேள்வி : அவ்வாறு வழங்கிய வாக்குறுதிகள் என்ன?

பதில் : முதலாவது - சமஸ்டி முறையூடாக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பார்கள் என்பது
இரண்டாவது - சர்வதேச விசாரணையை முன்னெடுப்பார்கள் என்பது.

கேள்வி :நீங்கள் அக்காலத்தில் மீகவும் பலமாக நம்பியிருந்த அமெரிக்கா கூட இப்போது அந்த நிலையில் இல்லையே?

பதில் : மஹிந்த ராஜபக்ச அவர்கள் இல்லாது போனதுடன் அந்த தேவையும் இல்லாது போயுள்ளது.

கேள்வி : அமெரிக்காவின் மாற்றம் தமிழ் மக்களுக்கு சாதகமானதா பாதகமானதா?

பதில் : பாதகமானது.

கேள்வி :தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளே பிளவுகள் உண்டா? இல்லை ?

பதில் : பிளவு உண்டு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் பிரச்சினை உள்ளது.

கேள்வி :நீங்களும் விக்னேஸ்வரன் அவர்களும் இணைந்து „தமிழர் பேரவை'என்ற அமைப்பை வடக்கில் எதற்காக உருவாக்கி கொண்டீர்கள்?

பதில் : தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு வேண்டுமென்று அதற்காக முன்வந்துள்ளோம்.

கேள்வி :நீங்கள் உருவாக்கியிருக்கின்ற அமைப்பு ஓர் சிவில் அமைப்பு. அவ்வமைப்புக்கு விக்னேஸ்வரன் போன்ற அரசியல்வாதி ஒருவரை தலைவராக்கி கொண்டது ஏன்?

பதில் : விக்னேஸ்வரன் மக்கள் ஏற்றுக்கொள்கின்றதோர் நபர்.

கேள்வி :அவ்வாறாயின் சம்பந்தன் அவர்களை மக்கள் மிகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்களே. சம்பந்தன் அவர்களை பேரவைக்கு தலைவராக நியமித்திருக்கலாமே?

பதில் : உண்மையைக் கூறினால் சம்மந்தன் அவர்கள் இந்நாட்டில் ஐக்கிய இலங்கை என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

கேள்வி : நீங்கள் அங்கம் வகிக்கின்ற பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன். அவரும் சமஸ்டி முறையையா கேட்கின்றார்?

பதில் : ஆம்.

கேள்வி :இந்த பேரவை த.தே.கூ வுக்கு எதிராக செயற்படுகின்ற அமைப்பா?

பதில் : எதிராக செயற்படுகின்ற அமைப்பல்லவே. த.தே.கூ விலுள்ள பங்காளி அமைப்புக்களான ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிறேமச்சந்திரன் புளொட் சித்தார்த்தன் ஆகியோரும் இங்குள்ளார்கள். த.தே.கூ
தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அச்சமுறத் தேவையில்லை.

கேள்வி : அவ்வாறாயின் த.தே.கூ வை அச்சுறுத்தவா இவ்வாறானதோர் பேரவையை உருவாக்கினீர்கள்?

பதில் : அச்சுறுத்தவல்ல. மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.

கேள்வி : மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் உங்கள் பேரவை வரும் தேர்தலில் போட்டியிடுமா?

பதில் : நாங்கள் முன்னேறிச் செல்வோம். எதிர்காலத்தில் பார்போம் என்ன நடக்கப்போகின்றது என்பதை.



Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>