Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

நாட்டை தலைமைதாங்கும் பலம் வாய்ந்த சந்ததி உருவாக்கப்பட வேண்டும் - மகிந்த

$
0
0
நாட்டிற்கு தலைமை வகிக்கும் பலம் வாய்ந்த சந்ததியொ ன்று உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸின் அல்பொசோ நகரில் நடைபெற்ற 10 வது கணித மற்றும் விஞ்ஞான போட்டியான ஒலிம்பியாட்டில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்தனர். இச்சந்த்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை சார்பில் இப்போட்டியில் விஞ்ஞான பிரிவில் 12 பேரும், கணித பிரிவில் 9 பேரும் பங்குபற்றினர். விஞ்ஞான பிரிவில் 4 தங்க பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், வெண்கல பதக்கங்கள் 3 உம் கிடைத்ததுடன், கணித பிரிவில் 2 வெள்ளி பதக்கங்களையும், 5 வெண்கல பதக்கங்களையும் இலங்கை மாணவர்கள் சுவிகரித்தனர்.

விஞ்ஞான பிரிவில் இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து நாடுகளையும் விஞ்சும் வகையில் அதிக புள்ளிகளை பெற்று பதுளை மகா வித்தியாலய மாணவர் பிரவின் சுமனசேகர தங்க பதக்கத்தை சுவிகரித்தார். சிறந்த கலாசார பிரிவிற்கான விருது விஞ்ஞான பிரிவு மாணவர்கள் வழங்கிய விசேட நிகழ்விற்கு கிடைத்தது.

இம்மாணவர்களை பாராட்டிய ஜனாதிபதி அவர்களுக்கு சான்றிதழ்களையும் விருது களையும் வழங்கினார். இவ்வெற்றிக்கு காரணமாக ஆசிரியர்களும் கௌரவிக்கப் பட்டனர்.

சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இம்முறையே இலங்கை அதிக பதக்கங்களை வென்றெடுத்தது. இந்தியா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றினர். இப்போட்டியில் இலங்கை 2 ஆம் இடத்தை பெற்றது. விளையாட்டு அல்லது கல்வியில் ஏனைய நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றிபெறுவோரை கௌரவிப்பது அரசின் கடமையும் பொறுப்புமென ஜனாதிபதி இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

விளையாட்டிலோ அல்லது கல்வியிலோ ஏனைய நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றிபெறுவோரை பாராட்டுவது எமது கடமையும் பொறுப்புமென்பதே எனது கருத்தாகும். இதன் மூலம் நாட்டிற்கு பெரும் புகழ் கிடைக்கின்றது. இது போன்ற கல்வி நிகழ்ச்சிகளில் வெற்றி பெறுவது மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். இதன் மூலம் மாணவர்கள் சிறந்த அனுபங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

30 வருட யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு எதிர்கால சந்தத்தியினருக்காக நாடு தயார்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இந்நாட்டை தலைமைதாங்கும் பலம் வாய்ந்த சந்ததி உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் பெற்ற வெ ற்றி உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் பெற்றோருக்கும் பெரும் கௌரவத்தை பெற்றுத் தந்துள்ளது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கும் இது பெரும் உந்து சக்தியர்கும். எமக்கும் கூட பெருமையே. உங்களது வெற்றி எமது வெற்றியாகும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>