Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஆழிப்பேரலை விட்டுச்சென்ற எச்சங்கள்! -செ.துஷ்யந்தன்

$
0
0
ஆழிப்பேரலை ஊழித்தாண்டவம் ஆடி ஆண்டுகள் ஒன்பது கழிந்து விட்டது ஆனாலும் அது ஏற்படுத்திச்சென்ற வலிகளும் வடுக்களும் இன்னும் மக்கள் மனங்களில் ஆறாத ரணங்களாக இருக்கின்றன.

செல்வத்தையும்இ மகிழ்சிசியையும் வழங்கிய கடல் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குள் புகுந்து ஊழித்தாண்டவம் ஆடும் என்று யார் நினைத்தார்கள் ? 2004 டிசம்பர் 26 வழமை போன்றே பொழுது விடிந்தது. டிசமபர் 25 இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடிய கழிப்பில் அன்று மாலை படுக்கைக்கு சென்ற பலர் காலை பிணமாக மாறிய பயங்கரம் தேசத்தையே ஒரு உலுக்கு உலுக்கியதை எப்படி மறக்க முடியும்.


இன்று நினைத்தாலும் என் ஈரக்குலை நடுங்குகின்றத ஒவ்வொரு பொழுதும் கடலை பார்த்து எமது சீவியம் போனது கூட்டுக்குடும்பமாய் இருந்த எங்களை பேரலை சின்னாபின்னமாக்கியதை என் உடம்பின் உயிர் இருக்கும் வரை மறக்கவே முடியாது. யாருக்குமே நாங்கள் துரோகம் செய்யவில்லை என் கணவன் இரண்டு பிள்ளைகள்இ பேரப்பிள்ளைகள் என ஐந்து பேரை கடலுக்கு இரையாக்கி விட்டு நான் தனிமரமாய் நிற்கிறேன் என்னதான் கொட்டிக்கொடுத்தாலும் அழிந்து போன என் குடும்பத்தையும் இ நிம்மதியையும் உங்களால் மீட்டுத்தர முடியுமா ?!. கண்களில் நீர் ததும்ப கணத்த மனதுடன் கேட்டார் ஆழிப்பேரலையின் உயிர் தப்பிய கல்முனையைச் சேர்ந்த க.திலகவதி.

ஆழிப்பேரலையின் அதிக உயிர் இழப்புக்களை சந்தித்த மாவட்டங்களுள் அம்பாறை மாவட்டம் முதல் இடம் பெறுகிறது. அதிலும் கல்முனைப் பிரதேசமே ஆழப்பேரலையால் முற்றாக உருக்குலைந்து போன பிரதேசமாகும். அன்று அப்பேரலையால் பாதிக்கப்பட்ட கல்முனை மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. சிலருக்கு இன்றும் இருப்பதற்கு கூட வீடு கிடைக்காத நிலையில் இலவு காத்த கிளி போல வாழ்கின்றனர். இதற்கு அரசியல் வாதிகளினதும்இ அதிகாரிகளினதும் அசமந்த போக்கே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கென கட்டப்பட்ட வீட்டுத் திட்டங்கள் கூட இதுவரை அம்மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாதுள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியில் அம்பாறை நுரைச்சோலை எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள 500 வீட்டுத்திட்டமானது பேய் உறையும் வீடுகளாகவும் பற்றைக் காடுகளாகவும் காட்சியளிக்கின்றன. இதற்கு காரணம் சுனாமியால் பாதிக்கப்படாத சிங்கள மக்களுக்கும் அதில் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என அரசியல் வாதிகள் முரண்டு பிடிப்பதே ஆகும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென அவர்களின் கலைஇ கலாசார அடையாளங்களை பிரதிபடுத்தக்கூடியவாறு இவ்வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கபபடாத சமூகம்; உரிமை கோருவது எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும். தற்போது இவ்வீட்டுத்திட்ட விவகாரம் நீதி மன்ற விடயத்தில் இருப்பதனால் அதற்கான தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை இதனால் உறவுகளை இ வீடுகளை இழந்த மக்கள் அகதிகளாகவே உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர். பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் காலம் தாழ்த்தாது மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். தயவு செய்து இதனை அரசியல் ஆக்கி ஏழைகளின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக்கொள்ளாதீர்கள்.

இதே போன்று கல்முனை தமிழ் பிரதேசங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அரச சார்பற்ற நிறுவனங்களால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டுத் திட்ங்களும் அரையும் குறையுமாகவே காணப்படுகின்றன. இதில் பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் மேட்டுவட்டை வீட்டுத்திட்டம் இன்றும் வசதிகள் அற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. இங்கும் சில வீடுகள் முழுமை பெறாத நிலையில் உள்ளன.

2004 டிசம்பர் 26 இற்கு முன்னர் தனித்தனி வீடு இ வாசல்களில் சுதந்திரமாய் வாழ்ந்த இப்பகுதி மக்கள் இன்று தொடர் மாடி வீட்டுத் திட்டங்களில் சொல்லொண்னா துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் கல்முனை இ பெரியநீலாவணை பகுதிகளிலுள்ள  குறித்த தொடர் மாடிகளில் நீர்இ மின்சாரம் இ சுகாதாரம் மற்றும் கலை இ கலாசார ரீதியிலான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக இவர்கள் மிகுந்த மன உளச்சலுக்கு மத்தியிலே காலத்தை கடத்தி வருகின்றனர்.
ஆழிப்பேரலை ஏற்பட்ட போது ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடிய குடும்ப உறவுகளில் பலர் காணாமல் போயிருந்தனர்; அப்படி காணாமல் போனவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் சிலர் வாழ்கின்றனர். அவர்களுள் பாண்டிருப்பைச் சேர்ந்த சிவலிங்கம் இப்படிக் கூறுகின்றார்.

“சுனாமியடிச்சி ஒன்பது வருசமாப் போகுது என்ட மகன் உயிரோடிருக்கிறான் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது. எல்லா இடத்திலேயும் சாத்திரம் கேட்டுப் பார்த்திட்டன் மகன் உயிரோடு இருக்கிறதாத்தான் சொல்றாங்க. சுனாமி நேரம் என்ட மகனை உயிரோடு யாரோ பஸ்சில் ஏத்தி விட்டிருக்காங்க. அத பலர் பாத்திருக்காங்க அவன் அம்பாறைக்கு போன இடத்தில் தான் தவறியிருக்கிறான். அப்ப அவனுக்கு ஆறு வயசு. இப்ப 15 வயசு இருக்கும். எங்கேயோ ஒரு பௌத்த விகாரையில மகன் பிக்குவா மாற்றப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். என்ட மகன் ஒரு நாள் எங்களை தேடி வருவான்.” என்றார். இவரைப் போல பலர் சுனாமியின் போது காணாமல் போன உறவுகளைத் தேடி அலைந்துகொண்டே இருக்கின்;றனர் அவர்களின் நம்பிக்கையும்இ தேடலும் வீண் போய்விடக் கூடாது என்பதே எனது பிரார்த்தனை.

ஆழிப்பேரலையில் சிக்கி உயிர் பிழைத்த மக்களைவிட சுனாமித் தண்ணி காலில் பாடாதவன் கூட அதை காரணம் காட்டி பல வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொண்ட கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சுனாமியில் சிக்கி உறவுகள் உடைமைகள் பலவற்றை இழந்து நிhக்;கதியாய் நின்ற மக்களை காரணம் காட்டி வயிறு வளர்த்த பலர் இன்று வசதி படைத்தவர்களாக திரிகின்றனர் ஆனால் சுனாமியில் நேரடியாய் பாதிக்கப்பட்ட மக்களோ இன்னும் எழுந்திருக்கமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

சுனாமி பேரலையில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூர்ந்து உறவுகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பல்வேறு இடங்களிலும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கல்முனை தமிழ் பிரதேசத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வில் நினைவுத் தூபிக்குமுன் ஒன்று கூடும் உறவுகள் சுடர் ஏற்றி அழுதுபுலம்பும் காட்சி நெஞ்சை நெகிழச் செய்யும்.

ஆழிப்பேரலை அள்ளிச்சென்ற உயிர்களும்இ உடைமைகளும் கடலுக்குள் அடங்கிப் போனாலும் அவை விட்டுச்சென்ற எச்சங்கள் என்றுமே மறக்கமுடியாதவைகளாகும்

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>