Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

"புலித்தடம் தேடி.. இரத்த ஈழத்தில் 25 நாட்கள்"......!! தமிழ் பிரபாகரன் வீசா விதிகளை மீறியதற்காக நாடுகடத்தப்படுவார்!

$
0
0
வீசா விதிகளை மீறி, வடக்கில் இராணுவ முகாம்கள் பற்றிய தகவல்களை திரட்டியதாகவும், புகைப்படம் எடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இந்தியா வின் பிரபல சஞ்சிகையான "ஜூனியர் விகடனின்"ஊடகவியலாளரான தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைகள் முடிந்த பின்னர் சந்தேக நபர் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் பிரபாகரனை திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்துவார்கள் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக நாவற்குடா பகுதியில் இருக்கும் இராணுவ முகாம், அந்த பகுதியின் இராணுவ நடமாட்டங்கள், இராணுவ வாகனங்களின் நடமாட்டங்களையெல்லாம் அவர் படம் பிடித்திருந்தார் எனவும் அஜித் ஒரு சுற்றுலா பயணியான அவர் எதற்காக இராணுவ இலக்குகள், இராணுவத்தினரை மட்டும் குறிவைத்து படம் பிடிக்கவேண்டும் என்றும் பொலிஸார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கெமராவில் வேறு எந்த படங்களும் எடுக்கப்படவில்லை என்று கூறிய பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு விவகாரங்களை மட்டும் அவர் குறிப்பாக படம் பிடித்தது ஏன் என்பதுதான் தங்களின் சந்தேகத்தை அதிகரிப்பதாக தெரிவித்துள் ளனர். இவரது கைது குறித்தும், இலங்கையில் இவரது நடத்தை குறித்தும் இந்திய தூதரகத்திற்கு உரிய முறையில் தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும், பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளரார்.

அத்துடன் இலங்கைக்கு இந்தாண்டு சுற்றுலா வீசாவில் பயணம் செய்த 12 இலட்சம் பேரில் வெறும் ஆறுபேரை மட்டுமே நாங்கள் கைது செய்திருக்கிறோம். அந்த ஆறு பேரைக்கூட குறிப்பிட்ட இலங்கை சட்டங்களை மீறி செயற்பட்டதற்காக மட்டுமே கைது செய்திருக்கிறோம். இதை நாங்கள் மட்டும் செய்யவில்லை. எல்லா நாடுகளும் செய்யும் நடைமுறை தான் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

உதாரணமாக இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நின்று சுற்றுலாப் பயணிகள் யாரும் படம் எடுக்க முடியாது என்று கூறிய அவர், அந்த மாதிரியான விதிகள், கட்டுப்பாடுகள் இலங்கையிலும் இருக்கின்றன என்றும்இலங்கை விதிகளை மதித்து நடக்கும் சுற்றுலாப் பயணிகள் யாரையும் தாம் கைது செய்வதில்லை என்றும் கூறியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளரான தமிழ் பிரபாகரன் 'புலித்தடம் தேடி இரத்த ஈழத்தில் 25 நாட்கள்'என்ற புத்தகத்தை எழுதி இந்தியாவில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>