புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி பிரமாணம் செய்து கொண்ட பின்னர் அரச ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அரச ஊடகங்களுக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாளர்களும் புதிய தலைவர்களும் தான்தோன்றி தனமாக பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி ஊடக சுதந்திரத்தை முடக்கும் வண்ணம் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர் என்றும் இதனால் அரச ஊடகங்களை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கௌரவ ஜனாதிபதி அவர்களே
புதிய ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் நியமிக்கப்பட்ட லேக்கவுஸ் புதிய தலைவரான கிரிசாந்த குறே கடந்த 2018-12-20ம் திகதி தினமின ஆசிரியர் சீ.ஜி.அமரதுங்க அவர்களை திட்டி மிரட்டியதாக எங்களிடம் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
உடனடியாக நீ பதவியை விட்டு விலக வேண்டு;ம் என தினமின ஆசிரியர்கள் குழாம் முன்னிலையில் குறித்த ஆசிரியரை திட்டி மிரட்டி உள்ளார். குறித்த பத்திரிகை ஆசிரியர் எந்த கட்சியை சேர்ந்தவர் ஆயினும் எந்த கட்சியின் கொள்கையின் அடிப்படையி;ல் செயற்பட்டாலும் இவ்வாறு புதிய லேக்கவுஸ் தலைவர் மிரட்டியதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஊடக சுதந்திரததைப் பற்றியும் ஜனநாயகத்தை பற்றியும் கருத்துக்களை முன் வைக்கும் பிரதமர் அவர்களும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களும் புதிய லேக்கவுஸ் தலைவரின் இத்தகைய முறையற்ற நடவடிக்கைகளை அனுமதிக்கின்றனரா என்ற கேள்வியை முன்வைக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் சமிகர வீரசிங்க அவர்களையும் சிலுமின பத்திரிகை ஆசிரியர் சுனில் ஜயசேகர அவர்களையும் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு மிரட்டியுள்ளதாக எம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு புதிய லேக்கவுஸ் தலைவரால் லேக்கவுஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் மீதும் பழிவாங்கல் செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. 2015 ஜனவரி 8ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்றதன் பின் ஐக்கிய தேசிய கட்சியினரிhல் முன்வைக்கப்பட்ட் ஊடக சுதந்திரமும் ஜனநாயகமும் வெறும் வாய் வார்த்தை மட்டும் தான். நடைமுறையில் இச் சொற்களுக்கு இவ்அரசாங்கத்தில் எவ்வித பயனும் இல்லை என புதிய லேக்கவுஸ் தலைவரின் நடவடிக்கைகள் புலப்படுத்தியுள்ளது.
லேக்கவுஸ் தலைவரின் செயற்பாடுகளை போல ஏனைய அரச ஊடகங்களின் தலைவர்களினதும் செயற்பாடுகளும் அமையலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே லேக்கவுஸ் உட்பட ஏனைய அரச ஊடகங்களையும் தங்களின் கீழ் கொண்டு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
என ஊடவியலாளலர் சந்தன பண்டாரா அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றினை முன்வைத்துள்ளனர்.
அரச ஊடகங்களுக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாளர்களும் புதிய தலைவர்களும் தான்தோன்றி தனமாக பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி ஊடக சுதந்திரத்தை முடக்கும் வண்ணம் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர் என்றும் இதனால் அரச ஊடகங்களை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கௌரவ ஜனாதிபதி அவர்களே
புதிய ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் நியமிக்கப்பட்ட லேக்கவுஸ் புதிய தலைவரான கிரிசாந்த குறே கடந்த 2018-12-20ம் திகதி தினமின ஆசிரியர் சீ.ஜி.அமரதுங்க அவர்களை திட்டி மிரட்டியதாக எங்களிடம் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
உடனடியாக நீ பதவியை விட்டு விலக வேண்டு;ம் என தினமின ஆசிரியர்கள் குழாம் முன்னிலையில் குறித்த ஆசிரியரை திட்டி மிரட்டி உள்ளார். குறித்த பத்திரிகை ஆசிரியர் எந்த கட்சியை சேர்ந்தவர் ஆயினும் எந்த கட்சியின் கொள்கையின் அடிப்படையி;ல் செயற்பட்டாலும் இவ்வாறு புதிய லேக்கவுஸ் தலைவர் மிரட்டியதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஊடக சுதந்திரததைப் பற்றியும் ஜனநாயகத்தை பற்றியும் கருத்துக்களை முன் வைக்கும் பிரதமர் அவர்களும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களும் புதிய லேக்கவுஸ் தலைவரின் இத்தகைய முறையற்ற நடவடிக்கைகளை அனுமதிக்கின்றனரா என்ற கேள்வியை முன்வைக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் சமிகர வீரசிங்க அவர்களையும் சிலுமின பத்திரிகை ஆசிரியர் சுனில் ஜயசேகர அவர்களையும் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு மிரட்டியுள்ளதாக எம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு புதிய லேக்கவுஸ் தலைவரால் லேக்கவுஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் மீதும் பழிவாங்கல் செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. 2015 ஜனவரி 8ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்றதன் பின் ஐக்கிய தேசிய கட்சியினரிhல் முன்வைக்கப்பட்ட் ஊடக சுதந்திரமும் ஜனநாயகமும் வெறும் வாய் வார்த்தை மட்டும் தான். நடைமுறையில் இச் சொற்களுக்கு இவ்அரசாங்கத்தில் எவ்வித பயனும் இல்லை என புதிய லேக்கவுஸ் தலைவரின் நடவடிக்கைகள் புலப்படுத்தியுள்ளது.
லேக்கவுஸ் தலைவரின் செயற்பாடுகளை போல ஏனைய அரச ஊடகங்களின் தலைவர்களினதும் செயற்பாடுகளும் அமையலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே லேக்கவுஸ் உட்பட ஏனைய அரச ஊடகங்களையும் தங்களின் கீழ் கொண்டு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
என ஊடவியலாளலர் சந்தன பண்டாரா அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றினை முன்வைத்துள்ளனர்.