Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

அமைச்சர், ராஜாங்க அமைச்சர், பிரதியமைச்சர்களின் அதிகாரம். வை எல் எஸ் ஹமீட்

$
0
0
அமைச்சர்கள்

பிரதமரால் முன்மொழியப்படுகின்றவர்களைத்தான் அமைச்சர்களாக ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கு சொந்த அதிகாரம் கிடையாது. எனவே, பிரதமர் முன்மொழிகின்ற ஒருவரை நியமிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி கூறுவது அரசியலமைப்பு மீறலாகும். சரத்து 43(2) ஆனால் 30 பேரையும் நியமிக்க வேண்டும்; என்ற கட்டாயமில்லை. ஜனாதிபதி விரும்பினால் 30ஐ விட குறைவாகவும் நியமிக்கலாம். எத்தனை அமைச்சர்கள் என்பதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்குரியது. தேவையெனக்கருதினால் பிரதமரைக் கலந்தாலோசிக்கலாம். ஆனால் அதன்படி நடக்கவேண்டுமென்பதில்லை. சரத்து 43(1)

அதேபோன்று, அந்த அமைச்சர்களுக்குரிய அமைச்சுக்கள், அவற்றின் கீழ்வரும் நிறுவனங்களைத் தீர்மானிப்பது ஜனாதிபதியே. பிரதமரைக் கலந்தாலோசிக்கலாம். ஆனால் அதன்படி நடக்க வேண்டுமென்பதில்லை. 43(1)

தான் விரும்பும் நேரம் இந்த அமைச்சர்களின் அமைச்சுக்களையோ அதன்கீழ் வரும் நிறுவனங்களையோ ஜனாதிபதி மாற்றலாம். அது ஜனாதிபதியின் அதிகாரம். 43(3) ஆனால் பிரதமர் முன்மொழிந்தாலேயொழிய ஜனாதிபதி அவர்களை நீக்கமுடியாது. 46(3)

அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் முழுக்க, முழுக்க ஜனாதிபதியினுடையது. 52(1). இந்த செயலாளர்கள் அமைச்சர்களின் அறிவுறுத்தல், கட்டுப்பாட்டின்கீழேயே இயங்க வேண்டும். 52(2) ஜனாதிபதி ஒரு அமைச்சரை புறந்தள்ளி நேரடியாக செயலாளருக்கு உத்தரவு வழங்க முடியாது. அமைச்சின் முழுக்கட்டுப்பாடும் அமைச்சரிடமே இருக்கும். ஆனால் அமைச்சருக்குரிய அதிகாரம் தொடர்பான விடயதானங்கள் அனைத்தும் ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் வழங்கப்படும்.

மொத்த அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு பதில்கூற கடமைப்பட்டது. 42(2)

ராஜாங்க அமைச்சர்கள்

‘ராஜாங்க அமைச்சர்’ என்ற சொல் யாப்பில் இல்லை. ‘அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர்’ என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ‘ ராஜாங்க அமைச்சர் ‘ என்ற சொல் நடைமுறையில் உள்ளதால் அச்சொல்லே இக்கட்டுரையில் பாவிக்கப்படுகின்றது.

இவர்களை நியமிப்பதா? இல்லையா? என்று தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குரியது. நியமிப்பதாயின் பிரதமர் முன்மொழிகின்றவர்களையே நியமிக்க வேண்டும். 44(1). நீக்க வேண்டும்.

இவர்களுடைய அதிகாரம்

இவர்களுக்கு தனியாக அதிகாரம் வழங்கலாம், வழங்காமலும் விடலாம். அதிகாரம் வழங்குவதாயின் இருவகையாக வழங்கலாம். ஒன்று ஜனாதிபதி நேரடியாக வர்த்தமானி மூலம் வழங்குவது அல்லது உரிய அமைச்சர் வர்த்தமானி மூலம் வழங்குவது

ஜனாதிபதி அதிகாரம் வழங்குவது

ஜனாதிபதி தேவைப்படின் பிரதமருடன் கலந்தாலோசித்து இவர்களுக்கு அமைச்சர்களுக்கு வழங்குவதுபோன்று தனியான அமைச்சு வழங்கலாம். அல்லது அமைச்சு வழங்காமல் சில விடயதானங்களை மட்டும் வழங்கலாம். 44(2) அவ்வாறு வழங்கினால் அந்த விடயங்களில் அவர்கள் ஒரு முழுமையான அமைச்சரைப்போன்று செயற்படலாம். இவர்கள் பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் பொறுப்புக்கூறவேண்டியவர்கள். 44(4)

அமைச்சர் அதிகாரம் வழங்குவது

சம்பந்தப்பட்ட அமைச்சர் தனக்குக் கீழ்வரும் அமைச்சு, மற்றும் விடயதானங்கள் தொடர்பாக வர்த்தமானிமூலம் அதிகாரம் வழங்கலாம். 44(5)

இவர்களுக்கு ஜனாதிபதியோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ இவ்வாறு அதிகாரம் வழங்கவேண்டுமென எந்தக்கட்டாயமுமில்லை.

பிரதியமைச்சர்கள்

இவர்களும் பிரதமரின் சிபாரிசின்பேரிலேயே நியமிக்கப்பட வேண்டும். நீக்கப்பட வேண்டும்.

இவர்களுக்கு ஜனாதிபதி நேரடியாக அதிகாரம் வழங்குவதில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர் வர்த்தமானி மூலம் வழங்கலாம்.

கடந்தகாலங்களில் சில சந்தர்பங்களில் ராஜாங்க அமைச்சர்களுக்கு தனியான அமைச்சுக்களும் அதிகாரங்களும் வழங்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. அதற்காக எப்போதும் அவ்வாறு இல்லை.

தற்போது இவர்களுக்கு தனியான அமைச்சோ, அதிகாரங்களோ வழங்கப்படுமா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் ராஜாங்க அமைச்சர்களுக்கும் பிரதியமைச்சர்களுக்கும் நடைமுறையில் எதுவித வித்தியாசமுமில்லை.

இதனுடைய பொருள் அதிகாரம் வழங்காவிட்டால் எதுவும் செய்யமுடியாதென்பதல்ல. உரிய அமைச்சர்களை அணுகி எவ்வளவோ சாதிக்கலாம். அது அவரவர் திறமையைப் பொறுத்தது.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>