Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

தான் பெற்ற குழந்தையைப் பிறிதொரு பெண்ணிடம் கொடுத்து விட்டு தலைமறைவான தாய்: அம்பாறை பஸ் நிலையத்தில் சம்பவம் !!

$
0
0
அம்பாறை நகர் தனியார் பஸ் நிலையத்தில் வைத்து ஏழு நாட் களான பெண் சிசுவை வேறொரு பெண்ணிடம் கையளி த்துவிட்டு தாய் தலைமறைவாகியுள்ள சம்பவம் இடம் பெற்று ள்ளதாக அம்பாரை நகர பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, தனியார் பஸ் நிலையத்தில் சம்பவ தின த்தன்று மாலை 4.00 மணியளவில் கொழும்பிற்குசெல்வத ற்காக வந்திருந்த இரு பெண்கள் பஸ்ஸுக்காக காத்துக் கொண் டிருந்த போது சிசுவை தூக்கி வைத்துக் கொண்டிருந்த கறுப்பு நிற உடை அணிந்த தாய் ஒருவர் தான் மலசல கூடத்திற்கு செல்ல வேண்டியி ருப்பதால் குழந்தையைக் வைத்துக்கொள்ளுமாறு அவர்களிடம் கொடுத்துவிட்டு மலசலகூடம் சென்றுள்ளார்.

மலசலகூடத்திற்கு சென்ற தாய்; அரை மணித்தியாலம் சென்றும் திரும்பி வராத தையடுத்து சந்தேகம் கொண்ட பெண் சிசுவுடன் மலசல கூடத்திற்கு சென்று தேடிப் பார்த்தபோது அந்தப் பெண்ணை காணாததையடுத்து பஸ்நிலைய பொலிஸ் சோத னைச்சாவடியில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிசுவை அம்பாறை பொலிஸ் பெண்கள் பிரிவினர் மீட் டெடுத்து அம்பாறை போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்தனர் இதனை யடுத்து இச்சிசு பிறந்து 7 நாட்களான சிசு என வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள் ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக அம்பாரை நகரப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!