Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all 7870 articles
Browse latest View live

அரசியல் யாப்பினை மீறி பாராளுமன்று கலைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றில் 10 மனுக்கள்.

$
0
0
வரலாற்றில் முதற் தடவையாக நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரின் தீர்மானத்திற்கு எதிராக பெருமெடுப்பில் உச்ச நீதிமன்றில் மனுக்கள் குவிந்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டத்திற்கும் அரசியல் யாப்பிற்கும் முரணானது என 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதிகள் அதன் அவசரத் தேவையை உணர்ந்து இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர தனி நபர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினை சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளபோதும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் பாராளுமன்ற கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது என மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் எனவும் குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நிராகரிக்குமாறும் விசாரணைகளின் இறுதி முடிவுகள் வரும் வரையில் பொது தேர்தலை ஒத்தி வைக்குமாறும் உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ட்ரம்பின் வாகனத்தின் முன்னால் நிர்வாணப் போராட்டம் நடத்திய பெண்ணால் பாரிஸில் பரபரப்பு

$
0
0
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகன அணிவகுப்பு முன்பு இளம் பெண்கள் இருவர் மேலாடையை கழற்றி எறிந்து அரை நிர்வாணமாக ஓடிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செயல்படுத்தி வரும் பல்வேறு கொள்கைகளுக்கு உலகம் முழுவதுமே எதிர்ப்பு நிலவி வருகிறது. வெளிநாட்டு தொழிலாளர்கள், அகதிகளுக்கு கெடுபிடி, மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிவர்வகளுக்கு கட்டுபாடு, குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் வர தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் அவருக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் பிரான்ஸ் வருகை தந்துள்ள ட்ரம்ப், பாரிஸ் நகரில் நடந்த முதல் உலகப்போர் நினைவு தினத்தில் பங்கேற்றார். பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அவரது வாகனம் பாரிஸ் நகரில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென இளம் பெண் ஒருவர் தனது மேலாடையை கழற்றி வீசியபடி ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார். அவரை தொடர்ந்து மேலும் ஒரு பெண் அதேபோன்று மேலாடையை கழற்றி எறிந்தவாறு ஓடி வந்தார்.

உடனடியாக பிரான்ஸ் போலீஸார் அவரை சுற்றி வளைத்தனர். ஆனால் மற்றொரு இளம் பெண் போலீஸுக்கு பிடிகொடுக்காமல் நிர்வாணத்துடன் கீழே விழுந்துபடி தொடர்ந்து கோஷம் எழுப்பினர். பின்னர் போலீஸார் அவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் ட்ரம்ப் வாகன அணிவகுப்பில் பதற்றம் ஏற்பட்டது.

ட்ரம்புக்கு எதிப்பு தெரிவித்து பாரிஸ் பெண்ணிய இயக்கங்கள் போராட்டங்கள் அறிவித்து இருந்தன. நிர்வாண போராட்டம் நடத்திய பெண் அந்த அமைப்பை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. ட்ரம்ப் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.




மீண்டும் நாளை விசாரணை.

$
0
0
பாராளுமன்று கலைக்கப்பட்டது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்கள் மீதான விசாரணைகளை இன்றே ஆரம்பித்த உச்ச நீதிமன்று, மீண்டும் நாளையும் விசாரணைகளை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

விக்கியை சைக்கிள் கொம்பனியும் நட்டாற்றில் விட்டது. துரோகிகளுடன் கூட்டு சேர மாட்டார்களாம்!

$
0
0

நாடாளுமன்று கலைக்கப்பட்டு மக்களின் ஜனாநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளி நள்ளிரவிலிருந்து நாட்டுமக்கள் குழப்பமடைந்துள்ளபோதும், மக்களின் வாக்குகளை மீண்டுமொருமுறை சூறையாடுவது எவ்வாறு என அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

அவ்வகையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப்படும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் தமது வியூகங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர். அவ்வறிவித்தலின் பிரகாரம் முன்னாள் நீதியரசர் குறித்த முன்னணியினரால் நட்டாற்றில் விடப்பட்டுள்ளமை வெளியாகியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக கூட்டணி ஒன்றை அமைத்து மீண்டுமொருமுறை வடக்கின் முதலமைச்சராகலாம் என்ற விக்கினேஸ்வரனின் கனவு கஜேந்திரகுமாரின் இவ்வறிவித்தலினூடாக கலைந்துள்ளதாக எடுத்துக்கொள்ள முடிகின்றது.

தாம் விக்கினேஸ்வரனுடன் இணைந்து செயற்படமுடியாது என்பதற்கான காரணம், விக்னேஸ்வரனின் கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற 'துரோகிகள்'இருப்பதாகவும், 'தியாகிகளான'தாம் அவர்களுடன் கூட்டு வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள மண்டபமொன்றில் இடம்பெற்ற இந்சந்திப்பில் உரையாற்றிய கஜேந்திரகுமார், 'முதலமைச்சர் கட்சி அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக கஜேந்திரனும், மணிவண்ணனும் சென்று அவரை சந்தித்தார்கள். அப்போது அவர் சொன்னார்- இந்திய தூதரக அதிகாரிகள் அண்மையில் என்னை சந்தித்தார்கள். நீங்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டணி வைத்தால், சுலபமாக நீங்கள் முதலமைச்சராகி விடுவீர்கள். ஆனால், நீங்கள் அவர்களுடன் கூட்டணி வைப்பதை நாங்கள் விரும்பவில்லை என சொன்னார்கள் என அப்போது சொல்லியிருந்தார் என்ற விடயத்தை கூறி விக்கினேஸ்வரன் இந்திய நிகழ்சி நிரலில் இயங்குகின்றார் என்பதை போட்டுடைத்தார்.

மேலும், விக்னேஸ்வரனின் கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் என்பன இருக்கும் வரை நாம் அங்கம் வகிக்க முடியாது. தேவையானால், அவர்களையெல்லாம் விட்டு விட்டு முதலமைச்சர் தனி ஆளாக எம்மிடம் வரலாம்'என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராசா கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.



புலிகளின் பின்கதவு விளையாட்டை போட்டுடைத்தார் ரணில் விக்கிரமசிங்கே.

$
0
0
தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலை மற்றும் தன்மீது ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட விசேட உரையிலேயே அவர் இவ்விடயத்தை முதற்தடவையாக வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவையாவது, அரசியல்வேறு தனிமனித விருப்பு வெறுப்புக்கள் வேறு, எனது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நான் இரு தடவைகள் இருவேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடம்கொடுத்துள்ளேன். நான் ஜனாதிபதி வேட்பாளராக நின்றபோது புலிகள் இருதடவைகள் என்னுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள தூது அனுப்பினர், ஆனால் எனது வெற்றிக்காக நான் நாட்டுக்கு துரோகி ஆக நினைக்கவில்லை.

நான் அவ்வாறு செய்தது இந்நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டவே என்றும் தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரம சிங்க.

சஜித் பிறேமதாஸ பிரதமர் வேட்பாளர், ஐக்கிய தேசியக் கட்சியிலுள் வலுக்கும் எதிர்ப்பு.

$
0
0
நாடாளுமன்ற பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரமதேச பெயர் முன் மொழியப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இதுவரை பேச்சுவார்த்தை மட்டுமே நடைப்பெற்றுள்ளதாகவும், உத்தியோகபூர்வமாக முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு கட்சியினுள் ஏற்பட்டிருக்கும் பலத்த எதிர்ப்புகாரணமாக இவ்வாறானதோர் முடிவுக்கு அக்கட்சி சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்நிiலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர சஜித் பிறேமதாஸவை பிரதமராக்கி ரணில் விக்கரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ரணில் விக்கிரம சிங்க அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற அத்தனையும் நடவடிக்கைகளும் சஜித் பிரமதேச அவர்களின் தலைமையிலும் நடைபெறும் என கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவே நம்பிக்கைக்குரிய தலைவராம்! தர்மரத்ன தேரர் புகழாரம்:

$
0
0
தற்போதைய நாட்டின் அரசியல் சூழ்நிலையில், சர்வதேச நாடுகள் தலையிடுவது தொடர்பாக மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத தன்மை உருவாகியது. இந்நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து மக்களுக்கான அரசாங்கத்தினை தெரிவு செய்யும் பொறுப்பை மக்களிடத்தே கையளித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கை வைக்க கூடிய தலைவர் மகிந்த ராஜபக்ஷ மட்டுமே என முதியன்கவற விகாரைக்கு பொறுப்பான தேரர் பேராசிரியர் முருந்தெனிய தம்மரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நிறைவேற்று அதிகாரியும் சட்டவாக்க அதிகாரியும் முரண்படும்போது அதுதொடர்பில் மக்களின் தீர்ப்பை பெறுவதே ஜனநாயக முறையாகும். அதனாலே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து மக்களின் தீர்ப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார் என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றம் கலைத்தத்து சட்டவிரோதம் என தெரிவித்து சில அரசியல் கட்சிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமை. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.

எது எவ்வாறாயினும் அவர் இக்கருத்தை வெளியிட்டபோது அங்கு குழுமியிருந்தவர்கள் கூ இட்டதும் அவர்களை அமைச்சர் அடிக்க துரத்தியதும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயங்களாகும்.

இஸ்ரேலுக்கு தஞ்சம்கோரிச் சென்ற 13 இலங்கையர்களை அந்நாட்டு அரசு மோசமான நிலையில் அடைத்து வைத்துள்ளது.

$
0
0
இலங்கையில் ஏற்பட்ட சிறிய அரசியல் மாற்றத்தை சாட்டாக வைத்து இஸ்ரேலுக்கு அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் சுற்றுலா வீசாவில் சென்றவர்களை அந்நாட்டு அரசு தடுத்து வைத்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாதுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் குறித்த 13 பேருக்கும் மரண அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகளிடம்அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே பாதுகாப்பு நோக்கத்திற்காக சுற்றுலா விசாவில் இஸ்ரேலுக்கு வந்ததாக அவர்கள் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பிடம் கூறியுள்ளனர்.

குறித்த நபர்கள் பென்-குரியன் விமான நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தற்போது இஸ்ரேல் தடுப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில், இரு பெண்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மனித உரிமைகள் மீறப்பட்ட நிலையில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆடை மாற்றுவதற்கோ தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கோ வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் தமக்கான மருத்துவ வசதிகள் எதுவும் செய்துக்கொடுக்கப்படவில்லை எனவும் குறித்த இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர்கட்கு எவ்வித சந்தர்ப்பங்களும் வழங்காமல் இலங்கைக்கு திருப்பியனுப்புவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் அதிகாரிகள் மேற்கொண்டபோது, நபர் ஒருவர் தன்னிடமிருந்த கையடக்க தொலைபேசியூடாக இஸ்ரேலிலுள்ள நண்பர் ஒருவருக்கு விடயத்தை அறிவித்தபோது, அவர் சட்டத்தரணி ஒருவரை தொடர்பு கொண்டு விடயங்களை மேற்கொண்டதில் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளது என தெரியவருகின்றது.


அனந்தியும் தனி வழி! பிரபாகரன் பாணியில் செயற்படப்போறாவாம்!

$
0
0
வன்னியில் சிறுவர்களை இறுதி நேரத்தில் வகைதொகையின்றி படையில் இணைத்ததில் பெரும்பங்காற்றியவர் எழிலன் எனபடும் சசிதரன். இவர் அவ்வாறு படையில் இணையாத இளைஞர்களையும் அதற்கு எதிர்ப்பு காட்டிய பெற்றோரையும் தனது கையால் கருணை காருணியம் இன்றி சுட்டுத்தள்ளியவர் என்பது வன்னி மக்கள் அறித்த உண்மை.

இருந்தபோதும், கடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக களம் இறங்கிய எழினனின் மனைவி அனந்திமக்களால் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு விக்கினேஸ்வரனுடன் கூட்டுச் சேர்ந்தார். அத்துடன் தனது பெயரில் ஒரு கட்சியும் விலைக்கு வாங்கிக்கொண்டார். அவ்வாறு கட்சியை வாங்கிக்கொண்ட அவர் தனது கட்சியில் விக்கினேஸ்வரன் போட்டியிடவேண்டும் என்று எதிர்பார்த்தார். அனால் விடயம் பிசகிப்போய் விட்டது.

தற்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் விக்னேஸ்வரன் அணியுடன் கூட்டு வைக்கப் போவதில்லையென்றும் தமது கட்சி சுயேட்சையாகவே களம் இறங்கும் என்றும் அறிவித்துள்ளார் அனந்தி சசிதரன்.

அத்துடன் பயங்கரவாதியான பிரபாகரனால் தமிழ்ச்செல்வன், எழிலன் போன்றவர்கள் அரசியலுக்கு இனங்காட்டப்பட்டுள்ளனர் என்றும் அப்படிப்பட்ட போராளிகளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டிய வேலைகளை தனது கட்சி மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மிடத்துல் உலமா சபைக்கு நேரில் சென்றார் மஹிந்தர்.

$
0
0
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அலுவலகத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ நேற்று பிற்பகல் நேரில் சென்று கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலை தொடர்ந்து உலாமா சபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில் :

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். சர்வமதத் தலைவர்களை சந்தித்து வரும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்க நேரம் கோரப்பட்டதையடுத்து குறித்த சந்திப்பு இன்றுஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

தனதுரையில் 1924ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து எமது நிறுவனம் நாட்டில் மார்க்க பணிகளை செவ்வனே செய்து வருவதுடன் சமூக நலன்களிலும் அக்கறை செலுத்தி வருகின்றது. அதே நேரம் எவ்வித அரசியல் சாயங்களையும் பூசிக் கொள்ளாத ஒரு அமைப்பாகவும் ஜம்இய்யா இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் அவர்கள் அனுமதி கோருகின்ற போது ஜம்இய்யாவை சந்திப்பதற்கான நேரங்களை வழங்கி வருவது ஜம்இய்யாவின் வழமைகளில் ஒன்றாகும். இந்த வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் நம்மை சந்தித்துள்ளனர். அச்சந்திப்புக்கள் மிக சிநேகபூர்வமானதாகவே அமைந்திருந்தன.

பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் நீங்கள் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் பல அபிவிருத்திகளை நாட்டிற்கு செய்துள்ளீர்கள். இன்றைய நாட்களில் நாட்டில் அரசியல் ரீதியான நெருக்கடி நிலை ஒன்று நிலவி வருகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரம், சமாதானம், ஐக்கியம், ஜனநாயகம் ஆகியவற்றிற்கு பாரிய பாதிப்பு ஏற்படும் அதே நேரம் வெளிநாடுகளில் எமது நாட்டைப் பற்றிய தப்பான எண்ணங்கள் தோன்றவும் காரணமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்நிலையை அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியுமெனவும் இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தவிர்க்க முடிவதோடு நாட்டில் ஜனநாயகத்தையும், சட்டத்தையும் நிலைநிறுத்த முடியுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம்புகிறது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் முப்பது வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டிய தலைவர் என்ற வகையில் நீங்கள் இந்நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகமும், சமாதானமும் ஓங்கி நிற்க முயற்சிப்பீர்கள் எனவும் நாட்டு மக்களிடையே இனவாதம் ஒழிந்து அனைவரும் இலங்கையர் என்ற ஒரே குடையில் தொடர்ந்தும் பயணிப்பதினூடாக எமது தாய் நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காளியாக மாறுவீர்கள் எனவும் எதிர்பார்க்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். சர்வமதத் தலைவர்களை சந்தித்து வரும் இத்தொடரில் இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திப்பதற்கு அனுமதி வழங்கியதற்காக முதலில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு சகல தரப்பினரும், சகல இனங்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் தான் ஆட்சியில் இருந்த போது இன, மதஇ பேதமின்றி தனது செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும், இனவாத செயற்பாடுகள் நாட்டில் தலை தூக்காமல் இருக்க தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுத்தாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச்செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தினார்கள்.

அவர் தனதுரையில் நாம் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நீங்கி நாட்டின் ஜனநாயகமும், சட்டமும் மேலோங்கி நிற்க பிரார்த்திக்கின்றோம் எனக் கூறி நன்றியுரையை நிறைவு செய்தார்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமா செய்திகள்



புலிகளின் பின்கதவு விளையாட்டை போட்டுடைத்தார் ரணில் விக்கிரமசிங்கே.

$
0
0
தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலை மற்றும் தன்மீது ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட விசேட உரையிலேயே அவர் இவ்விடயத்தை முதற்தடவையாக வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவையாவது, அரசியல்வேறு தனிமனித விருப்பு வெறுப்புக்கள் வேறு, எனது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நான் இரு தடவைகள் இருவேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடம்கொடுத்துள்ளேன். நான் ஜனாதிபதி வேட்பாளராக நின்றபோது புலிகள் இருதடவைகள் என்னுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள தூது அனுப்பினர், ஆனால் எனது வெற்றிக்காக நான் நாட்டுக்கு துரோகி ஆக நினைக்கவில்லை.

நான் அவ்வாறு செய்தது இந்நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டவே என்றும் தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரம சிங்க.

பாராளுமன்றை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. சட்ட மா அதிபர். நீதிமன்றை சுற்றி பலத்த பாதுகாப்பு

$
0
0
19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில்விளக்கமளிக்கப்பட்டது.

ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானதல்ல என்று சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேநேரம் உச்ச நீதிமன்ற வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

லண்டன் கோயிலொன்றில் 50 ஆண்டு பழமைவாயந்த கிருஷ்ணன் சிலை கொள்ளை. வலைவிரித்துள்ள ஸ்கொட்லன்ட் யார்ட்

$
0
0
லண்டனில் புகழ்பெற்ற சுவாமிநாராயன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளியன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிலைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

லண்டனின் புறநகரான நியாஸ்டன் நகரில் வில்லஸ்டேன் லேன் பகுதியில் புகழ்பெற்ற சுவாமிநாராயன் கோயில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிலாந்தின் முதல் இந்து கோயிலாகவும், ஐரோப்பாவில் முதல் பாரம்பரிய கற்கோயிலாகவும் சுவாமிநாராயன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளிப்பண்டிகை கொண்டாட்டம் முடிந்து கோயில் திறக்கும் போது, அங்குள்ள 50 ஆண்டு பழமைவாய்ந்த கிருஷ்ணர் சிலைகளைக் காணாதது கண்டு கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோயிலின் தலைவர் குருஜிபாய் கேராய் கூறுகையில், ‘‘கோயிலில் உள்ள ஹரேகிருஷ்ணா மூர்த்தி சிலைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துப் பூஜிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துச் சமூகத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தச் சிலைகள் கருதப்பட்டது. தீபாவளிப்பண்டிகைக்காக ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். அப்போதெல்லாம் கிருஷ்ணர் சிலை இருந்தது. ஆனால், அதன்பின் கோயில் பூட்டப்பட்டு, மீண்டும் திறக்கப்படும்போது சிலைகளைக் காணவில்லை.

உண்மையில் அந்தக் கிருஷ்ணர் சிலைகள் தங்கத்தால் உருவானவே அல்ல. கொள்ளையர்கள் தங்கச்சிலை என்று நினைத்துத் திருடியிருக்கலாம், ஆனால், பித்தளைச் சிலையாகும்’’ எனத் தெரிவித்தார்.



கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட கிருஷ்ணர் சிலையின் புகைப்படம்


ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், வெள்ளிக்கிழமை நள்ளிவரு 1.50 மணிக்கு எங்களுக்கு சுவாமிநாராயன் கோயிலில் கொள்ளை நடந்துவிட்டதாகப் புகார் வந்தது. உடனடியாக அதிகாரிகள் கோயிலுக்குச் சென்று ஆய்வு நடத்தினார்கள். கோயிலில் சிலைகள் மட்டுமின்றி, பணம், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் எனத் தெரிவித்தனர்.

கோயிலின் நிர்வாகக் குழு உறுப்பினர் உமாங் ஜேஸானி கூறுகையில், இந்தக் கோயில் இங்கு எழுப்பப்பட்ட நாளில் இருந்து வழிபாடு நடந்து வருகிறது. நிச்சயம் சிலைகள் பாதுகாப்புடன் திரும்பி வரும் என நம்புகிறோம். சிலைகள் கொள்ளைபோனது அனைவருக்கும் வருத்தமான செய்தியாகும். சிலைகள் விரைவில் கிடைக்க பிரார்த்திப்போம் எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள யுனிவர்ஸல் சொசைட்டி ஆப் இந்துயிஸம் அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட் விடுத்த அறிக்கையில், லண்டன் மேயர் சித்திக் கான், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக கூடுதல் கவனம் செலுத்தி இந்த விவகாரத்தில் விரைந்துசெயல் வேண்டும்.

சுவாமிநாராயன் கோயில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட செய்தி உலக அளவில் இந்துக்களுக்கு அதிர்ச்சியானதாகும். கடினமாக உழைக்கும், ஒற்றுமையுடன், அமைதியாக வாழும் இந்து சமூகத்துக்கு இந்த செய்தி வேதனையை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு.

$
0
0
ஜனாதிபதியினால் பாராளுமன்றை கலைத்து புதிய தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்று புதிய தேர்தலுக்கான இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

பாராளுமன்றை ஜனாதிபதி கலைத்தது அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது அல்ல என அரசியல் கட்சிகள் மற்றும் பொது நிறுவனங்கள், தனிநபர்கள் இணைந்து தாக்கல் செய்த 12 மனுக்களை விசாரணை செய்த பிரதம நீதியரசர் அடங்கலாக 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு இத்தீர்ப்பினை சற்று முன்னர் வழங்கியுள்ளது.

முன்னால் தபால் அமைச்சரின் BMW காரின் திறப்பை காணவில்லையாம். ஆட்டையை போட திட்டம்.

$
0
0
அரசினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டும் சுகபோகங்கள் ஏராளம். அதேபோல் பாராளுமன்றம் கலைக்ப்பட்டால் அமைச்சர்களின் சுகபோகம் அத்தனையும் அரசின் வசம். இந்நிலையில் முன்னாள் தபால் அமைச்சர் மொவறமட் ஹலிம்டின் BMW காரை திருப்பி பாரம்கொடுக்கவேண்டிய நிலையில் காரின் திறப்பு மாயமாகியுள்ளது.

அமைச்சரின் தின அலுவலகள் அத்தனையும் முடிவடைந்த பின்னர் சாரதியிடம் திறப்பை வாங்குவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென திறப்பு மாயமாகியுள்ளதென தெரிவித்துள்ளார்அமைச்சர். இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்கின்றனர் அமைச்சின் ஊழியர்கள்.

நிலையினை சமாளிக்க தடுமாறும் முன்னால் தபால் அமைச்சர் மாயமான திறப்பிற்கு சாரதியே பொறுப்பு எனவும், வாகன திறப்பை பெற தேவையான 150000 பணத்தை சாரதி செலுத்த வேண்டும் என மிரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.தே.கட்சியினுள் சஜித்துக்கு தலையிடியாக மாறும் சம்பிக்க மற்றும ராஜித

$
0
0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வரும் நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமையில் மாற்றம் செய்யாது முன்னோக்கிச் செல்ல முடியாது என்ற ஒரு நிலையை தோற்றுவித்துள்ளது.

அத்துடன் அதற்கான மாற்றுத் தலைமையாக சஜித் பிறேமதாஸவை கட்சியின் சிலர் மும்மொழிவதுடன் எதிர்வரும் தேர்தலில் சஜித் பிறேமதாஸவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவேண்டும்எனவும் அவர்கள் கோருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதை விட பலமிக்க மக்கள் கூட்டமைப்பா உருவாக்குவதே இன்றைய தேவையாகும் என்றும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு தேர்தல் களத்தில் நாம் செயற்படுதல் வேண்டும் என்றும் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

கொழும்பில் நடைப்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி அவரின் கருத்தானது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவதிற்கான காய் நகர்தலில் சம்பிக ரணவக, ராஜித சேனாரத்ன ஆகியோர் ஈடுபட்டுள்ளதை ஊர்ஜிதம் செய்வதாக கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,

அனந்திக்கு தாமரை மொட்டை நீட்டுகின்றார் கருணா!

$
0
0
புலிகளின் மட்டு அம்பாறை தளபதியாகவிருந்து இலங்கை அரசின் பிரதி அமைச்சராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டவர் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன்.

அவர் தற்போது தனது சக தளபதியின் மனைவியான அனந்தி சசிதரனை மஹிந்த ராஜபச்சவுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தனது ட்வீடரில் மேற்படி வேண்டுதலை விடுத்துள்ள அவர் உங்களுடைய புதிய கட்சிக்கு வாழ்த்துக்களைதெரிவிக்கின்றேன் என்றும் நாங்கள் இணைந்து செயற்படுவதன் ஊடாக காணமல்போனவர்களுக்கான தீர்வினை கண்டு கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அனந்தி தனியாக கட்சி தொடங்கி தனித்தே செயற்படப்போகின்றேன் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடனோ செய்படமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


இன்று காலை பாராளுமன்று கூடியபோது கட்டித்தழுவிக்கொண்ட உறுப்பினர்கள்.

$
0
0
உச்ச நீதிமன்றினால் நேற்று வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை அடுத்து இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்று கூடியது. அதன் போது ஆழும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கட்டித்தழுவிக்கொண்டனர்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தரப்பிலிருந்து மஹிந்த தரப்பிற்கு மாறியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், வசந்த சேனாநாயக்க, பியசேன கமகே ஆகியோர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.







நாளை மீண்டும் பாராளுமன்று கூடுகின்றது. மஹிந்தருக்கு எதிரான நம்பிக்கையில்லை பிரேரணை நிறைவேறியது.

$
0
0
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாய்மொழி மூலம் வாக்கெடுப்பின் போது இது உறுதியானது எனவும் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் வாக்களித்ததை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று வாய்மொழி மூல வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எவராவது எதிர்க்க விரும்பினால் நாளை அவர்கள் அதனை செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தாங்கள் நாளையும் அதனை தோற்கடிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிக்கையில், சென்வாரம் 26ம் திகதி தொடக்கம் இந்த நாட்டில் ஒரு குழப்பமான நிலை இருந்தது. பதவியில் இருந்த பிரதமர் மாற்றப்பட்டார். ஒரு புது நபர் நியமிக்கப்பட்டார். இந்த நடைமுறைகள் அரசியல் சாசனத்திற்கு முரண்பாடாக அமைந்திருந்தது. கொள்கையடிப்படையில் இவற்றையெல்லாம் எதிர்ப்பதென்று எமது கட்சி முடிவெடுத்திருந்தது. அதன் பிரகாரம் நாங்கள் நீதிமன்றுக்குச் சென்று ஜனநாயகத்திற்கான வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளோம் என்றார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 102 பேரும் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 14 பேரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் 6 பேரும் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.









செல்லுபடியற்ற பாராளுமன்றின் தீர்மானம், செல்லுபடியற்றதாகும். மஹிந்தவே பிரதமர். கூறுகின்றார் தினேஸ் குணவர்த்தன

$
0
0
எவர் எது கூறினாலும் இந்நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே என்றும் செல்லுபடியற்ற பாராளுமன்றின் தீர்மானங்கள் செல்லுபட்டியற்றதாகும் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன.

தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயற்படுவார் என்று தெரிவித்துள்ள அவர், பாராளுமன்றின் சபாநாயகர் சர்வாதிகாரியாவும் நகைச்சுவையாளனாகவும் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சபாநாயகர் பாராளுமன்றின் சம்பிரதாயங்களுக்கு மாறாக செயற்பட்டு வருகின்றார் என்றும் சாடியுள்ளார்.

Viewing all 7870 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>