Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஹிந்தி தெரியாத வவுனியா பொலிசாரின் விசாரணைக்காக வைத்தியசாலையில் காத்திருக்கும் சடலம்!

$
0
0
வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை அருகில் இன்று மாலை(24) 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வவுனியா குட்செட் வீதியில் வசித்து வரும் ஒரு வயது குழந்தையின் தாயாகிய அகிலன் சுகன்யா என்ற 36 வயது பெண்ணே மரணமடைந்தவராவார். வவுனியா வடக்கு புதிய சின்னக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஐகொன் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் மோதியதால் குறித்த ஆசிரியர் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த வாகனச் சாரதியான இந்திய நாட்டைச் சேர்ந்தவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தெரியாது எனவும் ஹிந்தி மட்டுமே தெரியும் எனவும் கூறுவதால் வவுனியா பொலிசார் ஹிந்தி தெரியாமையால் விசாரணை செய்ய முடியாது அவலப்படுவதாக தெரியவருகிறது. அத்துடன் இறந்த ஆசிரியையின் சடலத்தையும் ஒப்படைக்கவில்லை. விசாரணைக்காக வாக்கு மூலம் பெறும் மட்டும் வவுனியா வைத்தியசாலையிலேயே குறித்த ஆசிரியையின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இறந்த பின் கூட சடலத்தை வைத்து அலக்கலிப்பதால் உறவினர்கள் விசனம் அடைந்துள்ளனர்.




Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>