பணமோசடி நடைபெற்றது அம்பலமாகியதை தொடர்ந்து கிளிநொச்சி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு திடீரென வடக்கு ஆளுநர் பணி இடமாற்றம் வழங்கியுள்ளதுடன் முல்லைத்தீவு கல்வி வலயக் கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றிய இராஜகுமார் உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடிய வகையில் மாகாணக் கல்வித் திணைக்களத்துக்குஇடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆளுனர் அலுவலகத்தில் கடைமையாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவிததார்.
மேலும் கிளிநொச்சி அதிகாரியைப் போன்று முல்லை கல்வி பணிப்பாளருக்கு எதிராகப் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் மாகாண ஆளுநரின் அனுமதியுடன் அவர் முல்லைத்தீவுக் கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதுடன் அவரது பொறுப்பை பதில் கடமையாற்றும் ஒருவரிடம் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.