Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

தன்மீது பொலிஸார் விசாரணை நடாத்துவது குறித்து தான்மகிழ்வதாகக் கூறுகிறார் ஞானசாரர்!

$
0
0
பொலிஸார் தன்னைப் பற்றி விசாரணை செய்ய முன்வந்திருப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார குறிப்பிட்டுள்ளார்.

தனக்கெதிராக உள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்ய முன்வந்துள்ளதனால், இதுவரை தான் வெளிப்படுத்தாத பல விடயங்களை, அதாவது அடிப்படைவாதிகள் முன்னெடுத்துச் செல்கின்ற பாரிய செயற்பாட்டை பொலிஸார் முன்வைக்க முடியும் எனத் தெளிவுறுத்தியுள்ளார்.

பௌத்த மதத்தை இழிந்துரைக்கும் பாரிய அளவு புத்தகங்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படுவதாகவும், அதுஉட்பட அடிப்படைவாதிகளின் பல்வேறு செயற்பாடுகளை இதுவரை தன்னால் முன்வைக்க முடியாமல் இருந்ததாகவும் தற்போது தனக்கு அதற்கான அவகாசம் கிடைத்துள்ளதாகவும், இது சிறந்த தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறியதொரு விடயத்திற்கும் பிறமதத்தவர்கள் பொலிஸிற்குச் சென்று முறைப்பாடு செய்வதாகவும், பௌத்தர்கள் அவ்வாறு செய்யாமலிருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் குறிப்பிடுகின்ற ஞானசார, தனது மதத்திற்கு இனத்திற்கு தீங்கு விளைவிக்கப்படும் எவ்வேளையிலும் பயமில்லாமல் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களை அவர் கேட்டுள்ளார்.

(கேஎப்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>