Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

நகர சபைக்கு எதிராக வழக்குத் தொடர்கிறது பொலிஸ்!

$
0
0
தினந்தோறும் குப்பைகளை அகற்றாதிருப்பதாக்க் கூறி பொலிஸாரினால் பாணந்துறை நகரசபைக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பிரதேசத்திலுள்ள பல இடங்களிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமை குறித்து, பிரதேசவாசி ஒருவர் சூழலியல் பொலிஸ் பிரிவுக்குச் செய்த முறைப்பாட்டையடுத்தே இவ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நகர சபைக்குட்பட்ட பகுதியெங்கிலும் தினந்தோறும் குப்பைகள் அகற்றப்படாதிருப்பதாகவும், ஒருநாள் விட்டு ஒருநாள் குப்பைகளை அகற்றும் பிரதேசம் பாணந்துறை நகர சபைப் பிரிவுக்குட்பட்டிருப்பதாகவும், பாணந்துறை நகர சபை சார்பில் பேசுகின்ற சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 9 மணிக்கு முன்னர் குறித்த பிரதேசத்திலுள்ள குப்பைகள் நகரசபை “ட்ரக்டர்” மூலம் எடுத்துச் செல்லப்படுவதாகவும், அதன்பின்னர் பிற பகுதிகளில் வாழ்கின்றவர்கள் வாகனங்களில் குப்பைகளைக் கொண்டுவந்து போடுவதாகவும், அவ்வாறு போட்டுச் செல்லும் ஒரு குப்பைப் பை அடுத்தநாள் நகர சபையினால் குப்பை அகற்றப்படும்வரை அப்பிரதேசத்தில் காணப்படும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>