இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை, பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளது என்பதை இறந்த கால வரலாற்றை எடுத்து நோக்கும்போது தெளிவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் பொதுமக்களே இன்னல்களை அனுபவித்தனர். இனம், மதம் எதுவாக இருந்தபோதும், பிரச்சினைகள் என்று வரும்போது அவர்கள் இன்னல்களைச் சந்தித்தனர்.
நிகழ்கால நிகழ்வுகளை எடுத்து நோக்கினாலும் அவ்வாறே உள்ளன. சென்ற முப்பது ஆண்டு காலமும் பொதுமக்களே பாரிய இன்னல்களை அனுபவித்தார்கள். அதேபோல, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற செயற்பாடுகளினூடாக இன்னல்களைச் சுமப்பவர்கள் இந்நாட்டு மக்களே. அதனால், இப்போது மேலெழுந்துள்ள பிரச்சினைகள் வெகுதூரம் செல்லாமல் இருக்க அதனை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவர்களாக உள்ளோம். அவ்வாறு கிள்ளி எறியும்போது அது எல்லோருக்கும் நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும். அதனை அடிப்படையாக வைத்தே ஒவ்வொருவரினதும் எண்ணப்பாடுகளை அலசி ஆராய்வதற்காக இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
மதவாதத்தை நாம் எடுத்துக் கொண்டால் அது பாரியதொரு தலைப்பு. அவ்வாறான ஒரு விடயத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேச முடியாது. பொறுமையாகவே செய்ய வேண்டும். ஏன் என்றால், அதுவே வைராக்கியத்தையும் குரோதத்தையும் உண்டுபண்ண வல்லது. எது எவ்வாறாயினும் மதவாதம் பற்றிப் பேசுவதற்கு முன், மதங்கள் தொடர்பிலான சில விடயங்களை அலச வேண்டியுள்ளது… அது நன்மை பயக்க்க் கூடியது.
நிகழ்கால உலகில் மூன்று முக்கிய மதங்கள் உள்ளன. கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க, இஸ்லாமிய, பௌத்த மதங்களே அவை. அம் மதங்கள் எல்லாவற்றிலும் உபதேசிக்கும் போது, ஏதேனும் ஒருவகையில் குறிக்கோள் ஒன்று உள்ளது. அவ்வாறாயின் அம்மதங்கள் மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகின்றது? என்பது மிக முக்கியமான விடயமாகும். அதனைத் தெளிவுறுத்துவதன் ஊடாக மதங்கள் பற்றி விபரிக்கலாம்.
கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க மத்த்தை எடுத்து நோக்கினால், அதன் அடிப்படை எண்ணக்கருவானது “உலகம் மகாபலம் பொருந்திய இறைவன் என்ற ஒருவனால் உருவாக்கப்பட்டது” என்றிருக்கின்றது. அம்மத்த்தைச் சரிவர பின்பற்றினால் கடவுளுடன் ஒன்றித்து சந்தோசிக்கலாம். அதாவது, மனிதன் முதல் உலகிலுள்ள அனைத்தையும் பரிபாலிக்கக் கூடியவன் கடவுளே.. அவனே உலகைப் படைத்தான். அக்கடவுளுக்கு தேவையான முறையில் நடந்துகொண்டால் ஊழியூழி காலம் சுவனத்தில் சந்தோசித்து இருக்கலாம். மாறாக, வழி தவறினால் கொடிய நரகமே அவர்களது இருப்பிடமாக இருக்கும் என்பது அவர்களுடைய அடிப்படை எண்ணக்கருவாகும்.
தமிழில் - கலைமகன் பைரூஸ்
நீளும்....
நிகழ்கால நிகழ்வுகளை எடுத்து நோக்கினாலும் அவ்வாறே உள்ளன. சென்ற முப்பது ஆண்டு காலமும் பொதுமக்களே பாரிய இன்னல்களை அனுபவித்தார்கள். அதேபோல, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற செயற்பாடுகளினூடாக இன்னல்களைச் சுமப்பவர்கள் இந்நாட்டு மக்களே. அதனால், இப்போது மேலெழுந்துள்ள பிரச்சினைகள் வெகுதூரம் செல்லாமல் இருக்க அதனை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவர்களாக உள்ளோம். அவ்வாறு கிள்ளி எறியும்போது அது எல்லோருக்கும் நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும். அதனை அடிப்படையாக வைத்தே ஒவ்வொருவரினதும் எண்ணப்பாடுகளை அலசி ஆராய்வதற்காக இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
மதவாதத்தை நாம் எடுத்துக் கொண்டால் அது பாரியதொரு தலைப்பு. அவ்வாறான ஒரு விடயத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேச முடியாது. பொறுமையாகவே செய்ய வேண்டும். ஏன் என்றால், அதுவே வைராக்கியத்தையும் குரோதத்தையும் உண்டுபண்ண வல்லது. எது எவ்வாறாயினும் மதவாதம் பற்றிப் பேசுவதற்கு முன், மதங்கள் தொடர்பிலான சில விடயங்களை அலச வேண்டியுள்ளது… அது நன்மை பயக்க்க் கூடியது.
நிகழ்கால உலகில் மூன்று முக்கிய மதங்கள் உள்ளன. கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க, இஸ்லாமிய, பௌத்த மதங்களே அவை. அம் மதங்கள் எல்லாவற்றிலும் உபதேசிக்கும் போது, ஏதேனும் ஒருவகையில் குறிக்கோள் ஒன்று உள்ளது. அவ்வாறாயின் அம்மதங்கள் மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகின்றது? என்பது மிக முக்கியமான விடயமாகும். அதனைத் தெளிவுறுத்துவதன் ஊடாக மதங்கள் பற்றி விபரிக்கலாம்.
கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க மத்த்தை எடுத்து நோக்கினால், அதன் அடிப்படை எண்ணக்கருவானது “உலகம் மகாபலம் பொருந்திய இறைவன் என்ற ஒருவனால் உருவாக்கப்பட்டது” என்றிருக்கின்றது. அம்மத்த்தைச் சரிவர பின்பற்றினால் கடவுளுடன் ஒன்றித்து சந்தோசிக்கலாம். அதாவது, மனிதன் முதல் உலகிலுள்ள அனைத்தையும் பரிபாலிக்கக் கூடியவன் கடவுளே.. அவனே உலகைப் படைத்தான். அக்கடவுளுக்கு தேவையான முறையில் நடந்துகொண்டால் ஊழியூழி காலம் சுவனத்தில் சந்தோசித்து இருக்கலாம். மாறாக, வழி தவறினால் கொடிய நரகமே அவர்களது இருப்பிடமாக இருக்கும் என்பது அவர்களுடைய அடிப்படை எண்ணக்கருவாகும்.
தமிழில் - கலைமகன் பைரூஸ்
நீளும்....