![](http://3.bp.blogspot.com/-t2ydVCz1VRk/U2duUhpsruI/AAAAAAAABCk/Hpsut7dxW2Q/s320/earth+quake.jpg)
மத்திய டோக்கியோவில் தான் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுகத்தால் 4 பேர் காயம் அடைந்ததாக டோக்கியோ தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ரயில் சேவை தாமதானது.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ரிக்டர் அளவுகோலில் 9 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தற்போது தான் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் 18 ஆயிரத்து 500 பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.