
இந்தக் கேள்வி பதில்களை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தொகுத்து வழங்கவிருப்பதுடன், பதில்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தியோகபூர்வ ட்டுவிட்டர் கணக்கின் ஊடாக வழங்கப்படுகின்றது
கேள்வி பதில்களுக்கு குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டிருப்பதால் ஜனாதிபதி அவர்களிடம் கேள்விகேட்க விரும்புபவர்கள் முன்கூட்டியே கேள்விகளை பதிவுசெய்யுமாறு ஜனாதிபதியின் பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக அலகு கேட்டுக்கொண்டுள்ளது. ட்டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னுடன் கலந்துரையாட வருமாறு ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.