பொகவந்தலாவ பிரதேசத்தில் மாணவா்கள் வழங்கிய தகவலின்படி விரைந்து சென்ற அட்டன் பொலிஸாா் குறித்த மூன்று சந்தேக நபா்களையும் விசாரணைக்குட்படுத்தியபோது புகையிலை தூள் அடைக்கப்பட்ட 300 டின்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
இது மாணவா்களுக்கு அதிகளவாக விற்பனை செய்யப்படுகின்றது என ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இது தடை செய்யப்பட்ட போதைபொருள் என்பது குறிப்பிடதக்கது.
கைது செய்த மூன்று நபா்களையும் முச்சக்கரவண்டியையும் 09.05.2014 அன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் பொலிஸாா் தெரிவித்தனா்.
க.கிஷாந்தன்