![]()
நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஆசிரியை ஒருவரை முழந்தாலிட வைத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவுக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு ஏழுவருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட
இரண்டுவருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை இன்று விதிக்கப்பட்டது.
மேலும் குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு 50,000 ரூபா தண்டமும் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு 3 லட்சம் ரூபா நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணன்டோவே இவ்வாறு தண்டனை விதித்துள்ளார்.