![](http://3.bp.blogspot.com/-tzEVR3WeLlc/U44EHCz-yCI/AAAAAAAAYNw/Fs5SJ60Okvo/s320/small+cra.jpg)
இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்கவிடம் கேட்ட போது, நேற்றைய தினம் பொலிசாரால் மீட்கப்பட்ட சிறியரக விமானமானது தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரப்படுத்தளுக்காக பயன்படுத்தப்பட்ட விமானமாகும்.
இந்த நிறுவனம் மொனராகலை, தம்புள்ளை, குருநாகல் ஆகிய பிரதேசங்களிலும் இந்த சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதேபோல யாழ்ப்பாணத்திலும் அவர்கள் விளம்பர நடவடிக்கையை மேற்கொள்ளும் போதே அதற்குரிய மின்சக்தி (பற்றரி சார்ஜ்) போதியதாக இல்லாமல் அது விடுதியின் மேல் விழுந்துள்ளது
அந்த விமானம் 100 மீற்றர் தூரத்திற்கு பறக்க கூடியதாகும் இந்த விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியினையும் அவர்கள் பெற்று இருக்கின்றனர். அதற்குரிய அனுமதிக் கடிதங்களை எமக்கு காட்டியதுடன் குறித்த விமானத்தின் அடையாளத்தையும் எமக்கு கூறியதை அடுத்து அந்த சிறிய ரக விமானத்தை உரியவர்களிடம் கையளித்து விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விமானம் வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் அது திடீரென செயலிழந்து விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிபிடத்தக்கது.