
கந்தானை ஹப்புகொடை பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 15 வயதான அபேக்ஷா செவ்மினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது தற்கொலைக்கு முன்னர் அவரால் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்றிலிருந்து கிடைத்த தகவலுக்கு அமையவே அவரது பாடசாலை ஆசியைகள் இருவருக்கும் மாணவியின் தற்கொலைக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.