Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

வட மாகாண சபை மீது நம்பிக்கையிழந்துவிட்டோம்!

$
0
0
வட மாகாண சபை மீது நம்பிக்கையிழந்துவிட்டதாக, கிளி நொச்சி பொது சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வட மாகாண சபை மீது இருந்த நம்பிக்கையை முற்று முழுதாக இழந்துவிட்டோம். கடந்த 29ம் திகதி வடக்கு முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும்,வட மாகாண சபையின் சில அமைச்சர்களும், கிளிநொச்சி பொது சந்தைக்கு வருகை தந்தபோது, நிரந்தர கட்டிடத் தொகுதியை விரைவாக அமைத்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு, முதலமைச்சர் அளித்த பதிலில், எமக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லையென்றும், கிளிநொச்சி பொது சந்தை வர்த்தகர்கள், நேற்று பிற்பகல் சந்தை வளாகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்து ள்ளனர்.

கிளிநொச்சி, கரைச்சி பொது சந்தை, கரைச்சி பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ்வருகின்றது. பிரதேச சபையும், அவர்களுக்கு பொறுப்பாக உள்ள வடக மாகாண சபைம், சந்தை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். எனினும் சந்தை வர்த்தகர்களாகிய எமக்கு 20 தடவைகளுக்கு மேல் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு பிரச்சினை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென, அவர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லையெனவும், தற்காலிக தகர கொட்டில்களில் தொடர்ச்சியாக நெருக்கடிகளுக்கு மத்தியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மலசலகூட வசதியோ, ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லையென, அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த சந்திப்பின்போது, 172 சந்தை வர்த்தகர்கள் கையொப்பமிட்டு, ஊடகங்களுக்கு அறிக்கையொன்றையும், அவர்கள் விடுத்துள்ளனர்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>