Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ரியால்களிலும் டொலர்களிலும் திண்டு கொழுத்து இருப்பவர்கள் எனக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கின்றனர்!

$
0
0
பொதுபல சேனாவைக் கண்டு அஞ்சுபவன் நானல்ல

நான் பிறக்கும்போது முஸ்லிமாகவே பிறந்தேன். இறக்கும் போதும் முஸ்லிமாகவே இறப்பேன், இஸ்லாத்திற்காக நான் தொடர்ந்தும் போராடுவேன் எனவும், முஸ்லிம் மக்களின் நன்மைக்காகவும்மத உரிமைக்காகவும் எனது இறுதி மூச்சுள்ளவரை போராடுவேன். இதற்காக இந்த சபைக்குள்ளும் வெளியிலும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என ஏ.எச்.எம்.அஸ்வர் எம்பி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ரியால்களிலும் டொலர்களிலும் திண்டு கொழுத்து இருப்பவர்கள் எனக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கின்றனர். இங்குள்ள சில குருடர்களும் கோணல் புத்திக் காரர்களும் எஸ்.எம்.எஸ் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள வர்களுக்கு போட்டுக்கொடுத்து எனக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

என்னை கொலை செய்துவிடுவேன் என்று சிலர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். என்னை கொலை செய்துவிட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றால் என்னை கொலை செய்யுங்கள் என்றும், அளுத்கம பேருவளை பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் நாட்டின் வேறு பகுதிகளில் பரவிவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறை செலுத்தியிருந்தேன். அளுத்கம பேருவளை பகுதியில் ஒவ்வொரு இடங்களிலும் அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கல்லிலும் மணலிலும் எனது கால் தடங்கள் பதிந்துள்ளன. இப்போது என்னை விமர்சிப்போர்கள் அப்போது பிறந்தும் இருக்க மாட்டார்கள். அவர்களது பெற்றோரிடம் போய் என்னைப்பற்றிக் கேட்டுப்பார்க்கட்டும் என தெரிவித்தார் .


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>