Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

6 வயது சிறுமி மீது பாடசாலையில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்!!

$
0
0
பெங்களூருவில் முதலாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி 2 பேரால் பாடசாலையில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

பெங்களூருவின் கிழக்குப்பகுதியில் விப்கியார் என்ற பாடசாலை உள்ளது. இந்தபாடசாலையில் முதலாம் வகுப்பு படிக்கும் றிசி( பெயர் மாற்றம்) என்ற சிறுமியை அப பாடசாலையில் பணிபுரியும் உடற் பயிற்சியாளரும், காவலாளியும் சேர்ந்து பாடசாலையின் மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாடசாலையில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அச்சிறுமி கழிப்பறைக்கு சென்றபோதே அவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்.

கடந்த ஜுலை 2 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்காமல் பாடசாலை நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சிறுமியின் தாய் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணி புரிகிறார்.

சம்பவம் நிகழ்ந்த பின் வீடு திரும்பிய அச்சிறுமி தனக்கு சோர்வாகவும், உடல் வேதனையாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே தனக்கு நிகழ்ந்த கொடுமையை அச்சிறுமி தெரிவித்துள்ளார். அதன் பின்னரே இதுகுறித்த விவரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறுமியிடம் கொடூரமாக நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பாடசாலையில் 20 க்கும் அதிகமான உடற் பயிற்சியாளர்கள் பணிபுரிவதால், குற்றவாளிகளை அடையாளம் காண அடையாள அணி வகுப்பு ஒன்றை நடத்த பொலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுவரை 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக பொலீஸார் தெரிவித் துள்ளனர். இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ள அந்த பள்ளி நிர்வாகிகளும், குற்றவா ளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இதுகுறித்த தகவல் இதர பெற்றோர்களுக்கும் தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் ஒன்று திரண்டு, பாடசாலை நேரத்தில் தங்களது குழந்தைகளின் பாதுகாப்புக்கு பாடசாலை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, பாடசாலை வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பாடசா லைக்குள் புகுந்து கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து கூடுதல் பொலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பாடசாலைக்கு விடுமுறை விடப்பட்டது.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை சமாதானப்படுத்திய பாடசாலை நிர்வாகி ஒருவர், இனிமேல் பாடசாலையில் மாணவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும், பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். இதனிடையே இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாடசாலை அதிபர் பாடசாலைக்கு வெளியே போராட்டம் நடத்துவது குறைகளை தெரிவிக்கும் முறை அல்ல என்றும், இதுபோன்ற குறைகளை தெரிவிக்க தனியாக ஒரு இமெயில் முகவரி அளிக்கப் படும் அந்த முகவரியில் பெற்றோர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

இந்தியாவில் பரவலாக பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாடசாலை வளாகத்திலேயே ஒரு 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம், இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்னையின் தீவிரத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக உள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>