பன்முக ஆளுமைமிக்க எழுத்தாளரும், கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் “நழுவி” கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பு - மருதானையில் நடைபெறவுள்ளது.
மருதானை, தெமட்டகொட வீதி, இல. 73 இல் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு விழா நடைபெறவுள்ளது.
தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
புரவலர் ஹாஷிம் உமரின் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் எழுத்தாளரும், கவிஞருமான முஸ்டீன் நூல் அறிமுகம் செய்வார். கவிமணி நஜ்முல் ஹுஸைன், சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி இருவரும் கவிவாழ்த்திசைப்பர்.
இக்கவிதை நூலில் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர் மீராலெப்பை முஸம்மில் பெற்றுக் கொள்வார்.
பேராசிரியர் துறை மனோகரன், கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் இருவரும் “நழுவி” திறனாய்வு செய்வர். கவிஞர் கலைவாதி கலீல், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் இருவரும் வாழ்த்துரை வழங்குவர். நிகழ்ச்சிகளை எழில்வேந்தன் தொகுத்து வழங்கவுள்ளார்.
(கேஎப்)
மருதானை, தெமட்டகொட வீதி, இல. 73 இல் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு விழா நடைபெறவுள்ளது.
தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
புரவலர் ஹாஷிம் உமரின் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் எழுத்தாளரும், கவிஞருமான முஸ்டீன் நூல் அறிமுகம் செய்வார். கவிமணி நஜ்முல் ஹுஸைன், சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி இருவரும் கவிவாழ்த்திசைப்பர்.
இக்கவிதை நூலில் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர் மீராலெப்பை முஸம்மில் பெற்றுக் கொள்வார்.
பேராசிரியர் துறை மனோகரன், கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் இருவரும் “நழுவி” திறனாய்வு செய்வர். கவிஞர் கலைவாதி கலீல், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் இருவரும் வாழ்த்துரை வழங்குவர். நிகழ்ச்சிகளை எழில்வேந்தன் தொகுத்து வழங்கவுள்ளார்.
(கேஎப்)