Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் - ஹிஜாப் அணியவே முடியாது.. ! - தேர்தல்கள் ஆணையாளர்

$
0
0
காதுகளை மூடிய அடையாள அட்டையும் செல்லுபடியாகாது!

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களுக்கான விசேட தெளிவுறுத்தல் கலந்தாலோசனை நேற்று (30) தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு ஜாத்திக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தேர்தல் ஆணையாளரிடம் பல வினாக்களை கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு வருகின்ற முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகமூடி வருவது தொடர்பாகவும், தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும்போது முஸ்லிம் பெண்கள் படம் எடுத்துக் கொள்ளும்போது, காதுகளை மூடும் வண்ணம் ஹிஜாப் அணிவதும் பிரச்சினைக்குரியதாகும் என வினா எழுப்பினார்.

அத்துடன், வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் முகமூடியிருப்பது தொடர்பிலும் தேர்தல் ஆணையாளரிடம் வினா எழுப்பியதுடன், அதுதொடர்பில் தேர்தல் ஆணையாளரின் கருத்தையும் குறிப்பிடுமாறு கோரினார்.

அவரது வினாவுக்கு விடையளிக்குமுகமாக தேர்தல் ஆணையாளர், வாக்குச் சாவடிக்கு வருகின்ற எந்தவொரு முஸ்லிம் பெண்ணோ வேறு எவரோ முகத்தை மறைத்து வர முடியாது எனக் குறிப்பிட்டார்.

அதற்கு எந்தவொரு முறையிலும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், நிகாப் மற்றும் புர்கா அணிந்து வாக்களிக்க முடியாது எனவும் தெளிவுறுத்தியதுடன் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும்போது காதுகளை மறைக்க முடியாது எனவும், ஒவ்வொருவரையும் இனங்காண ஏதுவாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் தெளிவுறுத்தினார்.

இதற்கேற்ப, எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்கும்போது முகத்தை முழுமையாகவோ குறைவாகவோ மறைக்க முடியாது என்பதுடன் அடையாள அட்டையில் காதுகள் மறைக்கப்படக்கூடாது எனவும் தேர்தல் ஆணையாளர் கட்சிச் செயலாளர்களிடம் தெளிவுறுத்தியுள்ளார்.

(கேஎப்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>