Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

இந்தியாவையோ அமெரிக்காவையோ நம்புவதில் அர்த்தம் இல்லை! தீர்வு வேண்டுமானால் ஒரே ஒரு வழி உண்டு!

$
0
0
இலங்கையின் உள்விவகாரத்தில் எந்தவொரு நாடும் அழு த்தம் பிரயோகிக்க முடியா எனவும் இலங்கை அரசாங் கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் ஆலோசனைகளை வழங்க முடியும் எனவும் அதனைதான் தென்னாபிரிக்கா செய்கின்றது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரி வித்தார்.

இலங்கை விவகாரத்தில்எவ்விதமான வெளித் தலையீடு களும் இருக்கக்கூடாது என்பதில் இந்தியா உறுதியுடன் இருக்கின்றது. ஆனால் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது அர்த்தமற்ற செயற்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவையோ அமெரிக்காவையோ அவர்கள் நம்புவதில் அர்த்தம் இல்லை. நாட்டில் பெரும்பான்மை இனத்தை பகைத்துக்கொண்டு தமிழ்த் தலைமைகளினால் ஒருபோதும் அரசியல் தீர்வைப் பெற முடியாது. பெரும்பான்மை மக்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலமே இணக்கமான தீர்வைப் பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. ஆனால் இதன்மூலம் என்ன பயன் கிடைக்கப்போகின்றது என்று தெரியவில்லை.

காரணம் தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வெளிநாட்டுச் சக்திகளுடன் செயற்பட்டுக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. அரசியல் தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் நாட்டின் பெரும்பான்மை மக்களின் மனதை வெல்லவேண்டும் என தெரிவித்தார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீடுகளும் இருக்கக்கூடாது என்று இந்தியா தெரிவித்துள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையி லேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>