![](http://2.bp.blogspot.com/-f5Twls3anJI/U_W22FLkmOI/AAAAAAAAZMs/0X2jg8uBVvg/s320/rohan-gunaratna.jpg)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் இன்னமும் பிரிவினைவாத நோக்கங்களைக் கொண்டவர்களாகக் காணப் படுகின்றனர். இவ்வாறான வர்கள் அரசியலுக்குள் வருவதன் மூலம் நாட்டில் மீண்டுமொரு அழிவுச் சூழல் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரிவினைவாத நோக்கம் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரதான அரசியலு க்குள் நுழைய அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் பாரிய தவறிழைத்துவிட்டது. 2009ஆம் ஆண்டே இதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் அரசியலுக்குள் வருவதைத் தடுப்பதற்கு புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த 'மோடியின் கீழ் இந்தியா, இலங்கை இந்திய உறவின் திருப்புமுனை'எனும் தொனிப் பொருளிலான விரிவுரையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.