Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி நோயான எபோலாவை குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு?

$
0
0
உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி நோயான எபோலா ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா, லைபீரியா, சியர்ராலோன், கினியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. எபோலா நோயை குணப்படுத்த கண்டறியப்பட்ட மருந்தை குரங்குக்கு செலுத்தி பரிசோதித்ததில் அது முழு மையாக குணமடைந்ததாகவும், மருத்துவ பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும்,மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித் துள்ளனர்.

இந்த நோய்க்கு இதுவரை 1400 பேர் பலியாகி உள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற் பட்டோர் நோய் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. எனவே அமெரிக்கா தயாரித்த "ஷ்மாப்"என்ற மருந்தை அதிகார பூர்வ மின்றி நோய் தாக்கியவர்களுக்கு வழங்கி சிகிச்சை அளிக்க உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது.

அதே நேரத்தில் இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட லைபீரியன் டாக்டர் மற்றும் அந்நாட்டை சேர்ந்த 3 பேர், ஸ்பெயின் பாதிரியார் ஆகிய 5 பேர் உயிரிழந் தனர். எனவே இந்த மருந்தை நோய் பாதித்த மனிதர்களுக்கு வழங்குவதில் குழப்பமும், சிக்கலும் ஏற்பட்டது.

எனவே "ஷ்மாப்"என்ற மருந்தை "சேஸ் மகாகுயஸ்"இனத்தை சேர்ந்த "எபோலா"நோய் தாக்கிய 18 குரங்கு களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. கனடா நாட்டின் பொது சுகாதார ஏஜென்சி இதற்கான ஆய்வை மேற்கொண்டது. அதில் குரங்குக ளுக்கு "எபோலா"நோய் முற்றிலும் குணமடைந்தது. குரங்குகள் அனைத்தும் உயிர் பிழைத்தன.

அதைத்தொடர்ந்து இந்த மருத்துவ பரிசோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் நோய் குணமாவதில் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வித்தியாசம் குறித்து குழப்பம் உள்ளபோதிலும், குரங்கு குணமானதால், மனிதர்களுக்கும் அந்த மருந்து வேலை செய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கேரி கோபிஞ்சர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த மருந்தின் தரத்தை மேம்படுத்தி மனிதர்களிடம் விரைவில் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கனடாவிலிருந்து வெளி யாகும் "நேச்சர்"என்ற மருத்துவ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா நோய் தாக்கிய குரங்குகளுக்கு மேற்கூறிய மருந்தை செலுத்திய 5 நாட்களுக்குள்ளேயே நல்ல முன்னேற்றம் தெரிந்ததாகவும், மருந்து செலுத்தாத எபோலா நோய் பாதித்த 3 குரங்குகள் எட்டு நாட்களில் உயிரிழந்துவிட்டதாகவும் ஆய்வில் தெரியவந்ததாக அந்த பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!