![](http://4.bp.blogspot.com/-qqFNoaolwqw/VB-7rvu-spI/AAAAAAAACJc/0BDuFx3i3Pc/s320/arrrest.jpg)
இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் குறித்த திருடனின் வீட்டினை முற்றுகையிட்ட மானிப்பாய் பொலிஸார் திருடி மறைக்கப்பட்டிருந்த பொருட்களினை மீட்டதோடு திருடனின் மனைவியினையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த வீட்டுத் தளபாட பொருட்கள் இலத்திரனியல் சாதனங்கள் எனப் பல பெறுமதி மிக்க பொருட்களையும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை தங்களுடைய வீட்டினை வாடகைக்கு கொடுக்கும் போது வாடகைக்கு வீட்டினை எடுப்பவர்கள் எவ்வாறானவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து வாடகைக்கு வழங்க வேண்டுமென வீட்டு உரிமையாளர்களிற்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை குறித்த கைதுச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில நாட்களிற்கு முன்னர் அப்பகுதி வீடொன்றில் இடம்பெறவிருந்த திருட்டு முயற்சியொன்றும் அப்பகுதி இளைஞர்களினால் முறியடிக்கப்பட்டமை குறிப்பிட த்தக்கது.