![](http://2.bp.blogspot.com/-2DYdibKrio4/VJ1gKaVBRKI/AAAAAAAAodU/hx8D7qGroRY/s320/gen%2Bfonseka%2B1.jpg)
பிலியந்தலவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெவித்துள்ளதுடன் உலகிலே பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிந்த நாடென்ற சாதனையை தாம் நிலைநாட்டியபோதும், நான்கே நான்கு புலிகள் எஞ்சியுள்ளதாகவும் அந்த நால்வரும் ராஜபக்சக்களின் சீலைக்குள் ஒழிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கே.பி, கருணா, பிள்ளையான் மற்றும் எமில்காந்தன் என்கின்ற புலிகள் நால்வருமே அவ்வாறு எஞ்சியுள்ளனர் என்றும் தவறுதலாகவேனும் பிரபாகரன் எஞ்சியிருந்தால் அவர் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் இராணுவத் தளபதி அரசுடன் இணையப்போவதாக அரச சார்பு இணையங்கள் பொய்பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் இவ்வரசாங்கத்தால் வழங்கப்பட்ட அத்தனை சுகபோகங்களையும் துறந்து நாட்டு மக்களுக்காக இவ்வரசாங்கத்திற்கு எதிராக போர்கொடி தூக்கிய தான் அந்தக்காரியத்தை எட்டாமல் உறங்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.