Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

வடமாகாணசபை தொடர்பாக மனந்திறக்கிறார் ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி

$
0
0
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களில் பலர் என்னுடன் இணக்கமாக வேலைகள் செய்து வருகின்றார்கள். ஆனால் சிலர் மாத்திரமே எதிராகச் செயற்படுகின்றனர். என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

நான் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மிக நல்ல முறையிலேயே வேலை செய்து வருகின்றேன். எனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடன்பிரச்சினை கிடையாது. வட மாகாண சபை தொடர்பாக நாங்கள் மிக நல்ல முறையிலேயே இணைந்து செயற்படுகின்றோம். நாங்கள் பரஸ்பரம் பேசுகின்றோம். எங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் கிடையாது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குறிப்பிட்ட சிலர்தான் பிரச்சினை பண்ணுகின்றனர். வட மாகாண சபையை சேர்ந்த குறிப்பிட்ட சிலருக்கு பயந்து ஆளுநர் செயற்பட முடியாது. குறிப்பிட்ட சிலருடைய அழுத்தங்களுக்காக அச்சப்பட முடியாது.

இந்நபர்களின் எதிர்ப்புக்கள், கருத்துக்கள் ஒவ்வொன்றையும் நான் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால் என்னால் வேலை செய்ய முடியாது. நான் எவ்வித தவறும் செய்யவில்லை. அரசமைப்புக்கு முரணாக செயற்படவில்லை. எனவே எனக்கு எதிராக எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும். நான் இராணுவத்தில் இருந்த போது நாட்டுக்கு மகத்தான சேவை ஆற்றினேன்.

என்னுடைய மகத்தான சேவைகளை அங்கீகரித்தே என்னை வட மாகாண ஆளுநராக நியமித்தார். சும்மா ஒருவரை ஆளுநராக ஜனாதிபதி நியமிப்பாரா?

ஆனால் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நானும் சாதாரண பொதுமகன் தான். நபர் ஒருவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பிற்பாடு சாதாரண குடிமகன்தான் என்பதை அவதானிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறுகின்றது. நான் மனித உரிமைகள் விடயத்தை கவனத்தில் எடுத்துள்ளேன். தமிழ் கூட்டமைப்புக்கும் எனக்கும் பிரச்சினை கிடையாது.

ஒரு ஆளுநரை மூன்றே மூன்று குற்றச்சாட்டுக்களுக்காகத்தான் பதவி நிக்க தீர்மானம் நிறைவேற்ற முடியும். ஊழல், மோசடி, அரசமைப்பின் மீறுகை நான் இம்மூன்று குற்றங்களில் எதையும் செய்யவில்லை.

எனவே எனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசமைப்புக்கு முரணானது மாத்திரம் அல்ல செல்லுபடி அற்றதும் ஆகும்.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>