Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

30 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேலுக்கு உளவு பார்த்த அமெரிக்க அதிகாரி விடுதலை.

$
0
0
அமெரிக்காவில் கடற்படை உளவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் ஜோனாதன் பொல்லார்ட். இவர் இஸ்ரேலுக்கு உளவு வேலை பார்த்தார். வடக்கு கரோலினாவில் புட்னர் மத்திய சிறையில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி இஸ்ரேல் உளவாளியிடம் கொடுத்த போது சிக்கி கொண்டார். எனவே, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதை தொடர்ந்து சிறையில் 30 ஆண்டுகளாக அவர் தண்டனையை அனுபவித்து வந்தார்.

இதற்கிடையே தான் அமெரிக்க குடியுரிமையை துறக்க விரும்புவதாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு செல்ல விரும்புவதாகவும் அமெரிக்காவுக்கு திரும்பி வரமாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்னயாகு உளவாளி பொல்லார்டை விடுதலை செய்து தங்கள் நாட்டுக்கு அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதற்கு அமெரிக்க எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜோனாதன் பொல்லார்ட் 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் நேத்னயாகு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவரை அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து ஒபாமா அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>