Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

சிசுவை உரப்பையில் போட்டு புதைத்தவர் யார்? சிசுவின் கொலைக்கு கள்ளத்தொடர்பா காரணம்? – யாழ் உரும்பிராயில் சம்பவம்

$
0
0
பிறந்து ஒரு சில மணிநேரத்திலேயே சிசுவை கொலை செய்து உரப்பையில் போட்டு புதைத்த அதிர்ச்சிகரமான சம்பவமென்று யாழ்.உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. உரும்பிராய் செல்வபுரம் தெற்கு கிரமசேவகர் பிரிவின் கீழ் உள்ள பற்றைக்காணிக்குள் புதைக்கப்பட்ட நிலையிலேயே குறித்த சிசுவின் சடலம் நேற்று மாலை 4 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான தெரியவருவதாவது, ஆணொருவரும் பெணணொருவரும் இணைந்து நேற்று மாலை பற்றைக்குள் ஏதோ குழி தொண்றி புதைப்பதை பாதையால் சென்றுள்ள ஒருவர் அவதானித்துள்ளார். இதனையடுத்து மேலும் சில அயலவரின் உதவியுடன் அங்கு சென்று பார்த்த போது, உரப்பைக்குள் ஏதோ வைக்கப்பட்டு இறுகக் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சந்தேகம் கொண்ட அவர்கள் கிராம சேவகரின் உதவியுடன் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.இதனையடுத்து குறித்த உரப்பையினை புதைத்தவர்களின் உறவுமுறையான ஒரு பெண் கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்துள்ளார். கர்ப்பமாக இருந்த காலத்தில் குறித்த பெண் வீட்டை விட்டு வெளியில் வருவது இல்லை. அவருடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் அப் பெண்ணின் குழந்தையாக அது இருக்கும் என்று ஊர் மக்கள் சந்தேகம் கொண்டனர். இதனையடுத்து அப் பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவருடைய வீட்டில் எவருமே இல்லை. பூட்டியிருந்தது. அதே போன்று அவருடைய வீட்டின் அயலில் உள்ளவர்களும் தமது வீட்டினை பூட்டிவிட்டு வெளியேறிவிட்டனர். இதனால் அவர்கள் மேலும் சந்தேசம் எழுந்துள்ளது. இச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளோம் என்று பிரதேச மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>