Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்!

$
0
0
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட முறைப்பாடுகள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இடமாற்றம்பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் நேற்றைய தினம் அலுவலக ஊழியர்களுடனான சந்திப்பில் தன்னை கள்வன் எனப்பெயர்சூட்டி வெளியேற்றியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் பிரதேச செயலரின் இடமாற்றத்தில் மகிழ்சியைதெரிவிக்கும் மக்கள், ஜெகதீசன் தனது சேவைக்காலத்தில் பல்வேறுபட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக சுற்றுக்சூழலுக்கு பாதிப்பதை ஏற்படுத்துகின்ற மணல் ஏற்றுவதற்கான அனுபதிப்பத்திர விடயங்களில் கையூட்டல்கள் பெற்றுக்கொண்டாகவும், அரச காணிகள் விவகாரத்தில் பல்வேறுமோசடிகளை செய்துள்ளதாகவும், ஊழியர்களிடமிருந்து சேகரித்து மேற்கொள்ளப்பட்ட ஆலய புனர்நிர்மானப்பணிகளுக்கான கணக்கறிக்கையை வெளிப்படுத்தவில்லை என்கின்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கிச்செல்கின்றனர்.

மேலும் ஜெகதீசனின் இடம்மாற்றத்திற்கு பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முயற்சிகளை மேற்கொண்ட சமூக அக்கறை கொண்ட இளைஞர்களுக்கு சிவில் சமூகத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் ஜெகதீசனின் மேற்படி குற்றச்செயல்கட்கு துணை நின்ற ஏனைய உத்;தியோகித்தர்களுக்கும் தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி நிற்கின்றனர்.

ஜெகதீசன் இதற்கு முன்னர் பணிபுரிந்த பல்வேறு பிரதேச செயலகங்களிலிமிருந்தும் மக்களினால் நிராகரிக்கப்பட்டு இடமாற்றம் பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>