
தமிழரசுக்கட்சியினர் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது என வலி தெற்கு பிரதேசசபையின் உறுப்பினர் ஜி.பிரகாஷை யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கினை இன்று விசாரணை செய்த யாழ் நீதிமன்று அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை தவறானது என்று இடைக்கால தடை விதித்துள்ளதுடன் வரும் 25ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது.
தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.பிரகாஷ் சார்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையானார்.
அவ்வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.