Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

கைத்தொலைபேசி வாங்கிக்கொடுத்து 16 வயது மாணவிக்கு விஞ்ஞானம் கற்பித்தவருக்கு விளக்க மறியல்.

$
0
0
16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆசிரியனை எதிர்வரும் கார்த்திகை மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

பெரியநீலாவணை யைச் சேர்ந்த யாதவன் என்ற பெயருடைய குறித்த நபர் மேற்படி குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் சார்பாக கல்முனையைச் சேர்ந்த ரமீஸ் என்ற பிரபல சட்டத்தரணி சார்பில் சட்டதரணி ஒருவர் ஆஜராகியுள்ளார்.

மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராக தொழில்புரிந்து வந்த யாதவன், அப்பாடசாலையில் தரம் 11 ல் கல்வி பயின்று வரும் மாணவியை நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த ஆசிரியர் வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் உழைத்து வருகின்றார். இந்நிலையில் தனது அம்மம்மாவுடன் வசித்துவரும் சிறுமியை 32 வயதான, திருமணமாகி ஒரு குழந்தையுள்ள மேற்படி ஆசிரியன், தொடர்சியாக துஷ்பிரயோகம் செய்து வந்ததாக சிறுமி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

ஆசிரியன் சிறுமிக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நடவடிக்கையின் போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>