Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

சவால்களை சமாளிப்பது கைவந்த கலை! எந்தவொரு நட்புறவு நாடும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை!

$
0
0
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அம ர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானம் கொண்டு வரப்படலாமென இலங்கையின் நட்புறவு நாடுகள் அரசாங் கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளி யாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை எனவும் எந்தவொரு நட்புறவு நாடும் அரசாங்கத் துக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரி வித்தார்.

மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்க நாம் தயாராகவேயுள்ளோம். அமர்வுகளின்போது அரசாங்கம் என்ற வகையில் எம்மிடையே எழுப்பக்கூடிய வினாக்களை அவற்றுக்கான விடைகளை தயார்படுத்தி வருகின்றோம்.

மோதல்களுக்குப் பின்னர் மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் செயற்பாடுகள் கட்டியெழுப்பப்படுகின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றச் செயற்பாடுகளை விளக்கமளிப்பது குறித்து நாம் தீர்க்கமாக ஆராய்ந் துள்ளோமெனவும் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றச் செயற்பாடுகள் குறித்து உலக நாடுகள் தெளிவான விளக்கத்தினை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருக்குமெனவும அவர் தெரிவித்தார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!