![](http://3.bp.blogspot.com/-m7_go_p1DXA/XA1c1SNGz8I/AAAAAAAAtog/UJHqMLx3oWc-9oQGKPuM9w4Syy_ZQ_n0ACLcBGAs/s200/Ranil%2Band%2Bfonseka.jpg)
அம்பாறையில் நடைப்பெற்ற கூட்டமொன்றில் பேசுகையிலேயே நாமல் குமார ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சூழ்ச்சி தொடர்பான மேற்கண்ட தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவினால் ஜனாதிபதியை கொலை செய்வது தொடர்பான ஒலிப்பதிவு அழிக்கப்பட்டுள்ளதாகவும் நாலக டீ சில்வா அவர்கள் தனக்கு பணம் கொடுக்க முயற்சித்ததாகவும் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாமல் குமாரவினால் இத்தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்துவிட்டு சிங்கள தேசிய இயக்கத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாமல் குமாரதுங்கவின் கூற்றுபடி கொலை முயற்சிக்கான பிரதான காரணி ரணில் விக்கிரமசிங்க என்றால் அவருக்கு எதிராக ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? கொலை முயற்சிக்கான திட்டம் வகுத்தவர் சரத் பொன்சேகா என்றால் ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.