![](http://4.bp.blogspot.com/-GilZ6UDVVho/XBtzIxZjvJI/AAAAAAAAt2A/AVX7tAQxtk0A2i0KO728etehf8leqguFwCLcBGAs/s200/bribe.jpg)
இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த அதிகாரி இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தத்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேவை தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள தான் பரிந்துரை செய்வதாக தெரிவித்து, ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கேட்டு, பின்னர் அதனை ஒரு லட்சம் ரூபாவாக குறைத்து, அதில் 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதே குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதனால் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு இலஞ்ச ஊழல் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.