எதிர்வரும் ஆண்டக்கான வரவு செலவுத்திட்டம் இதுவரை பாராளுமன்றில் அங்கீகாரம் பெறாத நிலையில், புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வினால் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இக்கண்கறிக்கையினூடாக எதிர்வரும் 4 மாதங்களுக்கான செலவினங்களுக்கு பாராளுமன்றின் அங்கீகாரம் கோரப்படுகின்றது.
அதேநேரம் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இடைக்கால கணக்கறிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மை குலையாதிருக்க இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் பாராளுமன்றத்தில் இன்று (21) சமர்ப்பிக்கப்படும் இடைக்கால கணக்கறிக்கை க்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற கசப்பான செயற் பாடுகள் காரணமாக நாட்டில் ஸ்திரத்தன்மை சீர்குலைந்ததாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தொடர்ந்தும் அந்த நிலை நீடிப்பதற்கு இடமளிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.
தான் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தது நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை தவிர்ப்பதற்காகவாகும். என்னைப் பொறுத்த வரையில் நான் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன். ஐ. தே. க. எப்போதும் கட்சி அரசியலுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, நாட்டைக் காப்பாற்றிய தலைவன் என்ற அடிப்படையில் தம்மால் அப்படிச் செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டார்.
தேவையென்று கருதியிருந்தால் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணை ஜனவரி 18ஆம் திகதி முடிவுறும்வரை பிரதமர் பதவியில் தன்னால் இருந்திருக்க முடியும் எனவும் தன்னிடம் அவ்வாறான குறுகிய கொள்கை எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கண்கறிக்கையினூடாக எதிர்வரும் 4 மாதங்களுக்கான செலவினங்களுக்கு பாராளுமன்றின் அங்கீகாரம் கோரப்படுகின்றது.
அதேநேரம் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இடைக்கால கணக்கறிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மை குலையாதிருக்க இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் பாராளுமன்றத்தில் இன்று (21) சமர்ப்பிக்கப்படும் இடைக்கால கணக்கறிக்கை க்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற கசப்பான செயற் பாடுகள் காரணமாக நாட்டில் ஸ்திரத்தன்மை சீர்குலைந்ததாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தொடர்ந்தும் அந்த நிலை நீடிப்பதற்கு இடமளிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.
தான் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தது நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை தவிர்ப்பதற்காகவாகும். என்னைப் பொறுத்த வரையில் நான் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன். ஐ. தே. க. எப்போதும் கட்சி அரசியலுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, நாட்டைக் காப்பாற்றிய தலைவன் என்ற அடிப்படையில் தம்மால் அப்படிச் செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டார்.
தேவையென்று கருதியிருந்தால் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணை ஜனவரி 18ஆம் திகதி முடிவுறும்வரை பிரதமர் பதவியில் தன்னால் இருந்திருக்க முடியும் எனவும் தன்னிடம் அவ்வாறான குறுகிய கொள்கை எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.