மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க்பபட்டுள்ளதாகவும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவில்
1021குடும்பங்களை சேர்ந்த 3589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பாதுகாப்பான அமைவிடங்களில் 419 குடும்பங்களை சேர்ந்த 1523 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில்
7386 குடும்பங்களை சேர்ந்த 24032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11 பாதுகாப்பான அமைவிடங்களில் 821 குடும்பங்களை சேர்ந்த 2556 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில்
1068குடும்பங்களை சேர்ந்த 3613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பாதுகாப்பான அமைவிடங்களில் 154 குடும்பங்களை சேர்ந்த 570 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சீரற்ற காலநிலையால் நான்கு வீடுகள் முழுமையாகவும், 148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.
ஆனாலும் பெரும்பாலான உதவிகள் நகரை அண்மித்த நலன்புரி நிலையங்களையே சென்றடைவதாக குறைகூறப்படுகின்றது.
எனவே மேற்படி மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வோர் பின்தங்கிய பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் கவனத்திலெடுக்குமாறு வேண்டுகின்றனர்.
அத்துடன் உதவிகளை வழங்குவோர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளை பெற்று அதற்கேற்றவாறு செயற்படுமாறு அந்நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.