![](http://4.bp.blogspot.com/-DNIKE29u9P4/XCS_RaPO_FI/AAAAAAAAuE4/sXvDHjBFGJYRfECox8ghL7nq6u4EDBDlwCLcBGAs/s200/TNA%2Band%2BUNP.jpg)
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தற்போதைய அரசாங்கம் இணைந்திருந்தாலும் பாராளுமன்றத்தில் 113 சாதாரண பெரும்பான்மை கூட இல்லை என்பதனை 21ம் திகதி பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவு திட்டம் முன் வைக்கப்பட்ட போது நிரூபனமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள விமல் வீரவங்ச, இவ்வாறான நிலையில் புதிய ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதென்றால் பாராளுமன்றை கலைத்து தேர்தலுக்கு செல்லுதலே பொருத்தமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முதலாவது இடைக்கால வரவு செலவு திட்டம் கொண்டு வரப்பட்டபோதே அரச தரப்பு உறுப்பினர்கள் 14 பேர் வாக்களிக்காமல் இருந்த போதே அரசாங்கத்தினுள் உள் பூசல்கள் இருப்பது தெளிவாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.