Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

வெள்ள நிவாரணம் வழங்குவதிலும் தனது போக்கிரித்தனத்தை வெளிக்காட்டிய காமச் சாமியின் சீடன்.

$
0
0
வன்னியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு பல்வேறுபட்ட தரப்புக்கள் உதவிகளை புரிந்தன. அந்த வரிசையில் தெருத்தேங்கையை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அடிக்கும் பாணியில் புலம்பெயர் தமிழர்களிடமும் , உள்ளுர் தனவந்தர்களிடமும் வசூலித பணத்தில் விக்கினேஸ்வரனும் மக்களுக்கு சில பொருட்களை வழங்கியிருந்ததார்.

ஆனால் அவர் அப்பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என பொதுவாக வழங்காது, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடுப்பங்களுக்கு பிரத்தியேகமாக வழங்கியதாக மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றனர். வன்னியில் பெருக்கெடுத்த தண்ணீர் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பம் எங்கே இருக்கின்றது என தேடிப்பாய்ந்ததா எனவும் அம்மக்கள் காமச்சுவாமியின் சீடன் விக்கினேஸ்வரனை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை வழங்கவெனச் சென்ற விக்கினேஸ்வரன், முகாம்களை அரசியல் மேடையாக்கியுள்ளார். அங்கு பேசிய அவர், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டுவர இலங்கை நீதித்துறை சிறப்பாக செயற்பட்டது போன்று, யுத்த குற்றங்கள் விடயத்திலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

விக்கினேஸ்வரனின் மேற்படி கருத்தானது அவர் அரசியல் கோமாளி என்பதுடன், மக்களை மந்தைகள் என கருதுகின்றார் என்பதை தெளிவுறச் செய்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணைகள் வேண்டும் எனக் கூறிவந்த விக்கினேஸ்வரன் தற்போது இலங்கை நீதித்துறையிடம் நீதி கேட்கின்றார்.

அவ்வாறாயின் விக்கினேஸ்வரனிடம் இலங்கைநெட் தொடுக்கும் கேள்வியாதெனில், அரசியல்யாப்பு மீறப்பட்டபோது சம்பந்தன்-சுமந்திரன் உட்பட அரசியல் தலைவர்கள் வழக்கு தாக்கல் செய்ததுபோன்று, காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக விக்கினேஸ்வரனால் இலங்கை நீதிமன்றில் இதுவரை ஏதாவது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?

மேலும் வடக்கில் அனர்தங்களுக்கு முகம் கொடுத்த மக்களுக்கு பல்வேறு பட்ட உதவிகளை செய்துவரும் இராணுவத்தினர் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள காமச் சுவாமியின் சீடன், படையினர் மக்களுக்கு உதவியளித்து வருவதானது, ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை பாதுகாப்பதற்கான முயற்சி என்றும் குற்றம் சுமத்தினார்.

முன்னாள் நீதியரசரான விக்கினேஸ்வரனிடம் இலங்கைநெட் மேலுமொரு கேள்வியை தொடுக்கின்றது. அக்கேள்வி யாதெனில், குற்றங்களை புரிந்த இராணுவம் அனர்த்த முகாமைத்துவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினால், அவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையில் ஏதாவது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? அன்றில் இது தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் உண்டா ? அவ்வாறாயின் எந்தெந்த நாடுகள் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டு



Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>