Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

புஷ்வானமாகிப்போன கஜேந்திரனின் நிவாரணப் பொட்டலங்கள்.

$
0
0
தமிழ்த் தேசியத்தின் மொத்த வியாபாரி நான்தான் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் குதிரை கஜேந்திரன், மக்கள் மத்தியில் எப்போதும் அசைக்க முடியாத நகைப்பு உரியவராக இருந்து வருகிறார்.

இவரது, ''தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கிறேன்''என்ற நீண்ட கால தொடர் நாடகமும் அவ்வப்போது வரும் அனர்த்தம் அவசர நிலைமைகளில் தன்னை விளம்பரப்படுத்த இவர் எடுக்கும் முயற்சிகளுக்கும் வன்னி மக்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து,தமிழ் மக்கள் வாழ்வின் மீட்சிக்காக குரல் கொடுக்கும் உறவுகளுக்கும் இப்ப நல்லாவே தெரியும்.

ஒரு காலத்தில் மக்களுக்கு அது செய்கிறோம் - இதை மாற்றுகிறோம் என்று கூக்குரல் இட்ட இவரைப் போன்றவர்களை வன்னிச் சனங்கள் இப்ப நல்லா அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இவங்கள் என்னடா என்டால் இன்னும் கொஞ்சக்காலம் மக்களை ஏமாற்றி சுகபோக வாழ்க்கையை வாழலாம் எண்ட நப்பாசையில இப்பவும் முன்னுக்கும் பின்னுக்கும் நாலு பொடியளோட, வெள்ளம் வந்து சனங்கள் தவிச்சு திரும்பவும் எல்லாத்தையும் தண்ணீல விட்டுட்டு, ஒருமாதிரி உயிரை மட்டும் கையில பிடிச்சுக் கொண்டு தப்பி இருக்க, தங்கட அடுத்த அரசியல் சுகபோக வாழ்க்கைக்கு அத்திவாரம் போடுறதுக்கு சனங்கள் அப்பாடா எண்டு இருக்கிற நேரமா பாத்து வெறும் 100 பொதியோட போய் சீனப் போட்டால் சனங்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்?

இப்ப எங்கட வன்னிச் சனங்கள் கொஞ்சம் தெளிஞ்சிட்டுதுகள். 600 குடும்பம் இருந்த கிளிநொச்சி திருநகர் இடைத்தங்கள் முகாமிற்கு உவர்தான் கஜேந்திரன் 100 பொதிகளோடு போய், கிடந்த மரியாதையையும் கெடுத்துட்டு வந்திருக்கிறார்.

வெளிநாட்டில இருக்கிற தமிழ் அமைப்புக்களும் புலம்பெயர் மக்களும் வன்னிச் சனத்துக்கு வெள்ளம் மழை எண்டு அறிய, துடிச்சு பதறி கணக்கே பாக்காம அள்ளி அனுப்பின காசினதும் அது மட்டுமா? இலங்கையில வெள்ளம் எண்டு மக்களிடம் சேகரித்த பணத்தினதும் மொத்த பெறுமதி யாருக்குத் தெரியும்........சிவ சிவா............!!!

ஆனால் இவர் கஜேந்திரன் என்ன செய்திருக்கிறார்? தன்னுடைய சில ஆக்களை கூட்டிக்கொண்டு கிளிநொச்சிக்கு போய் வெறும் 100 பொதியை மட்டும் கொடுத்து மிச்சம் 400 குடும்பங்களை கொதிச்செழ வைச்சிருக்கிறார்.

அடக் குடுத்தீங்கதான் அதையாவது ஒழுங்கா முழுமையா செய்தீங்களா.........?

இது அந்த முகாமில இருந்த சனம் முகம் சுளிச்சு சொன்ன கதை. அந்த விளம்பர வெள்ள நிவாரணப் பொதில இருந்த பொருள்களில் மொத்தப் பெறுமதி ஆகக்கூடியது வெறும் 900 ரூபா மட்டும்தான்.

3 கிலோ குத்தரிசி, 2 கிலோ கோதுமை மாவு, உப்பு பக்கற் 1, ப்பிரஸ் 1, குளோக்காட் 1, 1 பனடோல் காட், 1 பேபி சோப், கொஞ்சம் தூள், அரிசி மா பக்கற் 1 இது எல்லாத்தையும் விட ஒரே ஒரு ஷம்போ பக்கற்...........இதுதான் இவரின் வெள்ள நிவாரணப் பங்களிப்பு.




என்ன சேர் இங்கதானே 600 குடும்பங்கள் தங்கியிருக்கிறர்கள். நீங்கள் வெறும் 100 பொதிகள்தான் கொண்டு வந்திருக்கிறீங்கள் எண்டு தைரியமாக ஒருவர் விசாரித்திருக்கிறார்.

அதுக்கு இவர், தம்பி எனக்கு எத்தினை குடும்பங்கள் இருக்கிறார்கள் எண்டு தெரியாது..........என்ற பொறுப்பற்ற பதில். ஒரு அரசியல் பிரதிநிதி மக்கள் விடயங்களில் அக்கறை உள்ள ஒருவர் இப்படி பதில் கொடுப்பது முகம் சுளிக்கத்தானே வைக்கும்?

இது ஒரு புறம் இருக்க, இவர் வெள்ள நிவாரணம் வழங்கவேண்டும் என்று உதவிகேக்க, பதறி அடிச்சுக் கொண்டு வன்னிச் சனங்கள் யுத்தத்தில எல்லாத்தையும் இழந்து திரும்பி வந்து இருக்க மழை, வெள்ளம், காத்து எண்டு மறுபடியும் கஸ்ரமா துன்பமா எண்டு பதறித் தவித்து உதவி செய்தவர்களுக்கு கஜேந்திரன் எப்படி கணக்கு சொல்லப் போறார்????????????

ஆனால் ஒண்டு மட்டும் நிஜம். 100 ரூபா கொடுத்தால் 10
ரூபா கூட முழுமையா போய் சேராது என்பது. இந்த மக்களுக்கு உதவுகிறோம் கதையின் சாராம்சமே இதுதானே..........!

இப்ப வந்த இந்த வெள்ளத்துக்கு உண்மைiயில் நிறைய தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், கொழும்பு ஊடங்கள் சிலதும், வர்தகர்கள், புலம்பெயர் உறவுகள் எண்டு எல்லாரும் கணக்கே பாக்காமல் உதவி செய்ய, இவர் வெறும் 900 ரூபா பெறுமதியில் 100 பேருக்கு நிவாரணம். மற்றச் சனங்கள் வயித்தெரிச்சலை கொட்ட ..........இது தேவைதானா?

பாக்கப்போனால் இவர் கொடுத்த பொதிகளின் மொத்தச் செலவு பச்..............90,000 மட்டும்தான். 1 லட்சத்தைக்கூட தொடமுடியாத சுருக்கமான நிவாரண முன்னெடுப்பு.

இந்த நிவாரண வழங்கலை இவர் செய்யாமலே ஒதுங்கி இருந்தாலே பராவாயில்லை எண்டு எண்ணத் தோணுது.

ஆனாலும் அரசியல் விளம்பரம் தேவைபடும், சில மக்களை
ஏமாற்றும் விளம்பரப் பிரதிநிதிகளுக்கு இது சர்வசாதாரணம்.

நம்மட கவலை என்னவென்றால் இந்த விளம்பரத்திற்கு எத்தனை லட்சத்தை குளிருக்குள் உழைக்கும் சனம் அள்ளிகொடுத்திருக்கும் என்பதுதான்..

விரும்பம் என்றால் அவங்கள் ஒரு ரெலிபோண்போட்டு என்ன 90000 ரூபாவுக்குத்தான் சாமான் கொடுத்திருக்கிறாய், வையடா மிச்சப்பணத்தை என்று கேட்கலாம், வேண்டாட்டி விடலாம். ஆனால் ஒன்று விட்டயளாளென்றால் கண்டயளோ அவர் தொடர்ந்தும் உங்கள தலையிலை மிளகாய் அரைப்பார்.



Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>