Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

சிலையால் வந்த நிலை - யானையை பிளிற வைக்கும் மஹிந்த அணி.. தலையை பிய்க்கும் த.தே.கூ..

$
0
0
இனந் தெரியாத நபர்கள் சிலரால் அண்மைக்காலமாக, புத்தர் சிலைகள் அதிகளவில் உடைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த தினம் மாவனெல்ல பகுதியில், இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்று நாடு பூராகவும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இந்த சம்பவங்களை சந்தர்ப்பங்களாக வைத்து கொண்டு, அரசியல் தலைவர்கள் பலர், தமது அடுத்த அரசியல் காய் நகர்தலுக்காக மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதன்மூலம் தத்தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதே, பெரும்பாலானவர்களின் ராஜ தந்திரமாகவுள்ளது.

இந்த விவகாரம் சூடு பிடித்து வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல தமது கருத்துக்களை முன்வைத்திருந்தார். மேற்படி சிலை உடைப்பு சம்பவங்களின் பின்புலத்தில் அரசியல் சக்தியொன்று மறைந்திருப்பதாக அவர் அடித்துக் கூறுகிறார்.
.

இதேவேளை, நாமல் குமார அண்மையில் கூறிய கருத்துக்கு அமைவாக, கண்டி, திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால், ஐக்கிய தேசிய கட்சியின் பங்குபற்றுதல் இருப்பது திட்டவட்டமாக தெரிவதாக, மகிந்த அணியின் திலும் அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் சிலை உடைப்பு விவகாரத்தில், மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திலும் அமுனுகம,லொஹான் ரத்வத்த, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் செயல்பட்டுள்ளதாக, பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதேவேளை இந்த சதித்திட்டத்திற்கு பின்னால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியும், சற்று பலமாகவே உள்ளதென மற்றுமொரு சாராரும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

'ஆக, நாட்டில் இருக்கும் முதன்மைக் கட்சிகள், ஆளுக்கு ஒருவரை அசால்ட்டாக போட்டுக் கொடுப்பதனால், மக்களுக்கு இந்நாட்டில் இப்போது என்ன நடக்கிறது? என்றே தெரியவில்லை'.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>